எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

347 0

80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

அப்பத்தாவின் 40% சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஜீவானந்தம் மீது ஆதிகுணசேகரனும் அவரது தம்பிகளும் கொலை வெறியில் இருக்கிறார்கள். சொத்துக்காக இல்லாவிட்டாலும் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துக் கொள்ள ஜனனியும் அவரது அக்காக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தனை நாள் சுயநினைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பத்தா நேற்று கண் விழித்ததோடு எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்ள குடும்பத்தினர் அனைவரும் பேச்சு கொடுத்தனர். ஆனால் எப்போதும் போல் குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவரை சமாளிக்க நந்தினியும், ரேணுகாவும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மனுஷன் விடுவதாய் இல்லை. இன்றைய எபிசோடிலும் அது தொடர்கிறது. இருக்கிற எல்லா பெண்களும் கிரிமினலாய் இருந்தால் என்ன செய்வது? 80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என ஆக்ரோஷமாக கத்துகிறார் குணசேகரன்.

மறுபுறம் ஜனனி தனியாக ஜீவானந்தத்தை சந்திக்க சென்றிருக்கிறாள். இன்னொரு பக்கம் கிள்ளி வளவனும் கதிரும் அவர் கதையை முடிக்க வெறி கொண்டு அலைகிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார் ஜீவானந்தம். தன்னை தேடுபவர்களிடம் அகப்படுவாரா அல்லது எஸ்கேப் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted by - August 4, 2023 0
கயல் சீரியல் சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில்…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

Posted by - October 11, 2025 0
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக…

ஒரு கப் அரிசி மாவும், மைதாவும் இருக்கா? இப்படி போண்டா செய்யுங்க.. ருசியா இருக்கும்…

Posted by - November 16, 2023 0
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இப்படி குளிர்ச்சியான காலநிலையில் குறிப்பாக மாலை வேளையில் பலருக்கும் காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிடத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *