எதிர்நீச்சல் சீரியல் அப்டேட்… என்ன சொல்லப் போகிறார் அப்பத்தா?

346 0

80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன்.அப்பத்தா கண் விழித்தும் வாய் திறக்காமல் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குநர் திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். 2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் சத்யப்ரியா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் நடித்து வருகிறார். ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம்.

அப்பத்தாவின் 40% சொத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஜீவானந்தம் மீது ஆதிகுணசேகரனும் அவரது தம்பிகளும் கொலை வெறியில் இருக்கிறார்கள். சொத்துக்காக இல்லாவிட்டாலும் அப்பத்தாவுக்கும் ஜீவானந்தத்திற்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துக் கொள்ள ஜனனியும் அவரது அக்காக்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இத்தனை நாள் சுயநினைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அப்பத்தா நேற்று கண் விழித்ததோடு எழுந்து உட்கார்ந்து விட்டார்.

அவருக்கு நினைவு வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்ள குடும்பத்தினர் அனைவரும் பேச்சு கொடுத்தனர். ஆனால் எப்போதும் போல் குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவரை சமாளிக்க நந்தினியும், ரேணுகாவும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மனுஷன் விடுவதாய் இல்லை. இன்றைய எபிசோடிலும் அது தொடர்கிறது. இருக்கிற எல்லா பெண்களும் கிரிமினலாய் இருந்தால் என்ன செய்வது? 80 வயது கிழவிக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு, 8 வயது தாராவுக்கும் பயப்பட வேண்டியதா இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறேன் என ஆக்ரோஷமாக கத்துகிறார் குணசேகரன்.

மறுபுறம் ஜனனி தனியாக ஜீவானந்தத்தை சந்திக்க சென்றிருக்கிறாள். இன்னொரு பக்கம் கிள்ளி வளவனும் கதிரும் அவர் கதையை முடிக்க வெறி கொண்டு அலைகிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பார்க்க வீட்டிற்கு வந்து விட்டார் ஜீவானந்தம். தன்னை தேடுபவர்களிடம் அகப்படுவாரா அல்லது எஸ்கேப் ஆவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - February 24, 2023 0
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி,…

விவாகரத்து கேட்ட கதிருக்கு ஷாக் கொடுத்த நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

Posted by - January 22, 2026 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடர்ந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் கதிர் மற்றும் ஞானம் இருவரும் பிரச்னையை தொடங்கி பெண்களுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *