ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?

139 0

ஈரான் போர் சூழலால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று முதல், BPCL ‘ஸ்பீட்’, HPCL ‘பவர்’ மற்றும் IOCL-ன் ‘XP95’ போன்ற ப்ரீமியம் பெட்ரோல்களின் விலை லிட்டருக்கு ரூ.2.09 உயர்வு

ஈரான் போர் சூழ்நிலைக்கு மத்தியில், ஏற்கனவே எல்பிஜி நெருக்கடி நிலவி வரும் சூழலில், எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோலின் விலையை உயர்த்தியுள்ளன. இன்று, பிபிசிஎல்-இன் “ஸ்பீட் , ஹெச்பிசிஎல்-ன் “பவர்” மற்றும் ஐஓசிஎல்-ன் “எக்ஸ்பி95” போன்ற ப்ரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.09  ரூபாய் உயர்த்தப்பட்டது.

முன்னர் ஒரு லிட்டர் 111.68 ரூபாயாக இருந்த ப்ரீமியம் பெட்ரோலின் விலை, தற்போது ஒரு லிட்டருக்கு 113.77 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 103.92 ரூபாயாகவும், புனேவில் ஒரு லிட்டர் ப்ரீமியம் பெட்ரோல் 113.17 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100.83 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 102.18 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலரை தாண்டி, 118 டாலர்களாக விற்கப்படும் நேரத்தில், இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம், எல்பிஜி நெருக்கடியும் ஏற்கனவே நிலவி வருகிறது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு, சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிப்பதுடன், பணவீக்க அழுத்தங்களை மேலும் அதிகரிக்கக்கூடும்.

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களின் மூன்றாவது வாரம் இது. இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தாலும், தற்போதைய நிலைமை அதற்கு மாறாகவே உள்ளது. ஈரானின் உயர்மட்டத் தளபதிகள் கொல்லப்பட்ட போதிலும், தெஹ்ரானின் பதிலடித் தாக்குதல்கள், இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வராது என்பதை தெளிவுபடுத்துகின்றன.

ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு

கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்திய ரூபாய் கணிசமான சரிவைச் சந்தித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு முதல் முறையாக 93-க்கும் கீழே சரிந்தது. இது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது மேலும் அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், ப்ரீமியம் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சாதாரண பெட்ரோலின் விலையும் உயர்த்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் இதனால் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.

Related Post

பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?

Posted by - April 25, 2024 0
பிரபல வங்கிக்கு ரிசரவ் பேங்க் திடீர் தடை.. உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா? நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ்…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் – ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்

Posted by - July 4, 2023 0
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ்…

இந்தியாவின் UPI இனிமேல் பிரான்ஸில் பயன்படுத்தலாம்: பிரதமர் மோடி தகவல்

Posted by - July 14, 2023 0
இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய நேரப்படி நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத்…

ஒரு நாளுக்கு 26 சிகரெட் பிடிப்பதற்கு சமம்… 441 ஐ எட்டிய டெல்லி காற்றுமாசு.. நிலை 3 செயல்திட்டம் அமல்

Posted by - November 15, 2024 0
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *