ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

357 0

சென்னை:

சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ வகை-2 (முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய்) என்ற அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை பாதிப்பு இருக்கும் குழந்தைகளால் யாருடைய ஆதரவும் இல்லாமல் உட்காரவோ, நடக்கவோ முடியாது.அரிய வகை நோய் Spinal Muscular Atrophy: கோயம்புத்தூர் குழந்தைக்கு கிடைத்த ரூ.16  கோடி மதிப்பிலான ஊசி - BBC News தமிழ்

நரம்பு மண்டல செல்களும் அழிந்துகொண்டே வரும். சுவாச தசை பலவீனம் அடைந்து சுவாசிப்பதிலும் பிரச்சினை ஏற்படும். இதுபற்றி தெரியவந்ததும் ஆகாஷ் மிஸ்ரா குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். எப்படியாவது அந்த நோயின் பிடியில் இருந்து தங்களது குட்டி தேவதையை மீட்டு கொண்டுவர வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஸ்பத்திரிக்கு, சிவான்ஷியை சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, ‘இந்த அரிய நோயை குணப்படுத்த ‘சோல்கென்ஸ்மா’ என்று அழைக்கப்படும் மரபணு சிகிச்சை அவசியம். இதற்கான உயிர்காக்கும் மருந்தின் விலை ரூ.17½ கோடியாகும். அமெரிக்காவில் இருந்து வரவழைத்தால் சிகிச்சை அளிக்கலாம்’ என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.டி. நிறுவன ஊழியரான ஆகாஷ் மிஸ்ராவுக்கு ரூ.17½ கோடி என்பது இமாலய தொகையாகும். தனது வீடு, சொத்து என எதை விற்றாலும் அவரால் இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதையடுத்து அவர் பலரின் உதவியையும் நாடி வருகிறார். “தமிழக அரசு, தனிநபர், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் இணைந்து கருணை வடிவிலான உதவிகளை செய்தால் மட்டுமே எங்கள் குழந்தை மறுவாழ்வு பெறுவாள்” என்று ஆகாஷ் மிஸ்ரா உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Related Post

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!

Posted by - April 22, 2024 0
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் காவல்துறை தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - November 13, 2025 0
சட்டம் – ஒழுங்கைக் காப்பதில் தமிழக காவல்துறை தோல்வி அடைந்துள்ளதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் குற்றம்…

தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

Posted by - January 20, 2023 0
ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. தமிழகத்தில் தனியார் பாலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *