ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

197 0

சென்னை:

முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில பயன்களை பார்ப்போம்.

ஆலமரத்தின் பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தருகிறது. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் மிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது ஆலமரத்தின் பட்டைகள்… சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்றே இந்த பட்டைகளை சொல்லலாம்.

பட்டைகள்:

இந்த பட்டையை, இடித்து சாறு பிழிந்து, 10 பங்கு தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தாலே சர்க்கரை நோய் கட்டுப்படும் என்கிறார்கள்.. அல்லது ஆலமரத்தின் பட்டைகளை, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.. தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை சுண்ட காய்ச்சி, பிறகு அதை ஆறவைத்து குடித்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.ஒரே "பட்டை" போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை..  பெஸ்ட் "வலி நிவாரணி" பவுடர் | Do you know the Excellent Benefits of Banyan  Tree Bark and Banyan tree ...

சிறுநீரக பிரச்சினை இருந்தால், இந்த பட்டைகளை விழுதாக அரைத்து, சிறிது சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீரில் கலக்கி குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

புண்கள்:

பெருமளவு புண்களை குணமாக்கும் மருந்தாக, இந்த பட்டைகள் பயன்படுகின்றன.. அதனால்தான், வாய் சுகாதாரம் பேணுவதற்கு இந்த ஆல மரப்பட்டைகளை உபயோகிக்கிறார்கள்.. குறிப்பாக, பட்டையை தூள் செய்து, குடிநீரில் போட்டு வாய்க் கொப்பளித்து வந்தால், வாயில் உண்டாகும் புண்கள், சின்ன சின்ன கொப்புளம் ஆறிவிடும்.. அதேபோல, ஈறிலிருந்து வடியும் ரத்தமும் நின்றுவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.

இந்த பட்டைகள் மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.. அதனால்தான், மூட்டுவலி, முழங்கால் வலி, கீல்வாதம், கை கால் வலி போன்ற பிரச்சனை இருந்தால், இந்த பட்டைகளை அரைத்து, வலி உள்ள இடத்தில் தடவுவார்கள். இந்த பட்டையை காயவைத்து, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நீங்கிவிடும்..

பட்டைகள்:

ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால், புதிய ஆலமரத்து பட்டையை உலரவைத்து அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து தினமும் 2 வேளை, 4 கிராம் அளவு சாபபிட்டு வந்தாலே போதும். மாதவிடாய் நேரத்தில், அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தால், இந்த மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றை குடித்தால் தீர்வு கிடைக்குமாம். தோல் நோய்கள் இருந்தாலும், இந்த மரப்பட்டையின் பொடி போதும்.. பேதி இருந்தால், இந்த பொடியை தூள் செய்து சாப்பிடலாம்.. !!

Related Post

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 16-ந்தேதி நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - April 6, 2023 0
அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

ஆரஞ்சு பழம் சீசன் வர போகுது! நல்லதுதான் செய்யும்! ஆனா மறந்தும் கூட “இந்த” உணவுகளுடன் சாப்பிடாதீர்!

Posted by - December 12, 2023 0
சென்னை: ஆரஞ்சு பழத்துடன் எப்போதும் இந்த பழத்தை சேர்த்து சாப்பிடவே கூடாது தெரியுமா? மேலும் ஆரஞ்ச் பழத்தின் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். ரத்த குழாய்களில் சேரும் கெட்ட…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *