ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

195 0

சென்னை:

முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில பயன்களை பார்ப்போம்.

ஆலமரத்தின் பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தருகிறது. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் மிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது ஆலமரத்தின் பட்டைகள்… சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்றே இந்த பட்டைகளை சொல்லலாம்.

பட்டைகள்:

இந்த பட்டையை, இடித்து சாறு பிழிந்து, 10 பங்கு தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தாலே சர்க்கரை நோய் கட்டுப்படும் என்கிறார்கள்.. அல்லது ஆலமரத்தின் பட்டைகளை, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.. தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை சுண்ட காய்ச்சி, பிறகு அதை ஆறவைத்து குடித்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.ஒரே "பட்டை" போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை..  பெஸ்ட் "வலி நிவாரணி" பவுடர் | Do you know the Excellent Benefits of Banyan  Tree Bark and Banyan tree ...

சிறுநீரக பிரச்சினை இருந்தால், இந்த பட்டைகளை விழுதாக அரைத்து, சிறிது சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீரில் கலக்கி குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

புண்கள்:

பெருமளவு புண்களை குணமாக்கும் மருந்தாக, இந்த பட்டைகள் பயன்படுகின்றன.. அதனால்தான், வாய் சுகாதாரம் பேணுவதற்கு இந்த ஆல மரப்பட்டைகளை உபயோகிக்கிறார்கள்.. குறிப்பாக, பட்டையை தூள் செய்து, குடிநீரில் போட்டு வாய்க் கொப்பளித்து வந்தால், வாயில் உண்டாகும் புண்கள், சின்ன சின்ன கொப்புளம் ஆறிவிடும்.. அதேபோல, ஈறிலிருந்து வடியும் ரத்தமும் நின்றுவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.

இந்த பட்டைகள் மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.. அதனால்தான், மூட்டுவலி, முழங்கால் வலி, கீல்வாதம், கை கால் வலி போன்ற பிரச்சனை இருந்தால், இந்த பட்டைகளை அரைத்து, வலி உள்ள இடத்தில் தடவுவார்கள். இந்த பட்டையை காயவைத்து, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நீங்கிவிடும்..

பட்டைகள்:

ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால், புதிய ஆலமரத்து பட்டையை உலரவைத்து அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து தினமும் 2 வேளை, 4 கிராம் அளவு சாபபிட்டு வந்தாலே போதும். மாதவிடாய் நேரத்தில், அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தால், இந்த மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றை குடித்தால் தீர்வு கிடைக்குமாம். தோல் நோய்கள் இருந்தாலும், இந்த மரப்பட்டையின் பொடி போதும்.. பேதி இருந்தால், இந்த பொடியை தூள் செய்து சாப்பிடலாம்.. !!

Related Post

3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னன் கைது

Posted by - August 23, 2023 0
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சப்பா. இவரது மகன் கார்த்திக் (வயது23). பொக்லைன் டிரைவான இருவருக்கும், உத்தனப்பள்ளியை…

ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!

Posted by - June 28, 2025 0
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள்…

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 19, 2025 0
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *