கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

366 0

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.செய்திகள்

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் ஜாலியாக இருந்தனர். வாலிபர் வீட்டில் இருப்பதை பார்த்த சிலர் வேண்டும் என்றே திருடன்… திருடன்… என சத்தம் போட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டு முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும் அவர் அழைத்ததின் பேரில் வந்ததாகவும் வாலிபர் கூறினார். இளம்பெண்ணும் தான் அழைத்ததின் பேரில் தான் வாலிபர் வந்ததாகவும், எனவே நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறினார்.

இதனையடுத்து போலீசார் வாலிபரை விடுவித்தனர். வெளியே சென்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு வாலிபர் தான் காரணம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026

Posted by - March 29, 2025 0
 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ல் ஆளும் திமுகவை எதிர்கொள்ள, தவெக தலைவர் விஜய் வலுவான வியூகங்களை வகுத்து வருகிறார். வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம்…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

18 தலைமை காவலர்கள் பணியிடமாற்றம்!

Posted by - September 30, 2024 0
சேலம் மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தீவட்டிபட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மாமூல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *