“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

176 0

கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர் செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எனவே கீதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கீதா வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50-வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவரது மகள்கள் உறங்கும் போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இளம் பெண் வெளியே செல்லும் போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் கதவில்லாத ஜன்னலை இரும்பு ஷீட் வைத்து மறைத்த இளம்பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊராரிடம் தகவல் தெரிவித்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்ட இரும்பு ஷீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த இளம்பெண் சத்தம் போடவே தர்மலிங்கம் தப்பியோடியுள்ளார்

இதையடுத்து இளம்பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மலிங்கம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்த வீடியோக்களை அழித்து வேறு யாருக்காவது இந்த வீடியோக்களை அனுப்பியுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்

Posted by - March 16, 2023 0
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…

கடந்த நிதியாண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சென்னை துறைமுகம் சாதனை

Posted by - August 17, 2023 0
சென்னை: கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார். சுதந்திர தின விழாவை…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *