“தாய் மற்றும் மகள்களை ஆபாச வீடியோ எடுத்த கொத்தனார்” – தொடர்ந்து பாலியல் சைகை காட்டி டார்ச்சர்.. கைது செய்யப்பட்ட காமக்கொடூரன்!

174 0

கன்னியாகுமரி மாவட்டம், மொட்டவிளை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் பன்னீர் செல்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எனவே கீதா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

கீதா வீட்டில் படுக்கை அறையில் உள்ள ஜன்னலில் கதவுகள் பொறுத்தப்படாமல் உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த 50-வயதான கொத்தனார் வேலை பார்க்கும் தர்மலிங்கம் ஜன்னல் வழியாக கீதா மற்றும் அவரது மகள்கள் உறங்கும் போது அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இளம் பெண் வெளியே செல்லும் போது ஆபாச செய்கைகளை காட்டி தொடர் தொல்லை அளித்து வந்துள்ளார்.

இதனால் கதவில்லாத ஜன்னலை இரும்பு ஷீட் வைத்து மறைத்த இளம்பெண் தர்மலிங்கம் செய்யும் அநாகரிக செயல் குறித்து ஊராரிடம் தகவல் தெரிவித்து கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று இளம்பெண் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்ட இரும்பு ஷீட்டுகளை சுத்தியலால் நெம்பி துளையிட்ட தர்மலிங்கம் மீண்டும் செல்போனில் படுக்கையறை காட்சிகளை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த இளம்பெண் சத்தம் போடவே தர்மலிங்கம் தப்பியோடியுள்ளார்

இதையடுத்து இளம்பெண் தர்மலிங்கம் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் தர்மலிங்கம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் தனிப்படை அமைத்து அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து அதிலிருந்த வீடியோக்களை அழித்து வேறு யாருக்காவது இந்த வீடியோக்களை அனுப்பியுள்ளாரா? என விசாரித்து வருகின்றனர். தனியாக இருந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் கொத்தனார் பாலியல் தொல்லை கொடுத்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *