நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு.

106 0

TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்.

சேன்லகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கை நிறுத்திய மத்திய அரசு:

செய்தி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் பாயிண்ட்களை, 4 வாரம் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில்  பரபரப்பை கூட்டும் விதமாக, உறுதிப்படுத்தப்படாத மற்றும் யூகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதால், இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுநலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு சொல்வது என்ன?

இதுதொடர்பான அறிக்கையில், செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங் பாயிண்ட் அறிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, பார்க் (BARC) எனப்படும் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதில், “இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில், சில செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை காண்பிப்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கவனித்துள்ளது, இது பொது மக்களிடையே, குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பொது நலனுக்காக, செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகளை (TRP) வெளியிடுவதை நான்கு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லா கட்டுவதில் சிக்கல்:

தொலைக்காட்சி சேனல்களுக்கான வருவாய் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. அந்த விளம்பரங்களுக்கான ஒப்பந்தம் என்பது இந்த டிஆர்பி ரேட்டிங் மூலமே கிடைக்கிறது. எங்களுக்கு இத்தனை கோடி பார்வையாளர்கள் உள்ளனர், செய்தி சேனல் சந்தையில் நாங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க, பார்க் வழங்கும் இந்த டிஆர்பி எனப்படும் ரேட்டிங் புள்ளிகளே சாட்சியமாக உள்ளன. தற்போது அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு நிறுத்தி வைத்து இருப்பது முன்னணி செய்தி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சில நலிவுற்ற செய்தி சேனல்கள் தங்களுக்கு சாதகமான சூழலாக இதனை கருதுகின்றன.

தேர்தல் நேரமாச்சே..!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கள் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அராசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் சூடுபிடிக்க தொடங்கும். 10நொடி விளம்பரங்களுக்கு எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என்பதை இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் இறுதி செய்வார்கள். தற்போது அந்த ரேட்டிங்கிற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Post

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்- திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய வாலிபர்

Posted by - August 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.…

முதலீட்டாளர்களே மாதத்தின் கடைசி நாளில் கவனிக்க வேண்டிய பங்குகள்..

Posted by - July 31, 2024 0
இந்திய பங்குச்சந்தைகளின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய குறியீடு வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மாருதி, எம்&எம்,…

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

வயிற்றுவலி என வந்தவருக்கு திடீர் பிரசவம்: சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் அதிர்ச்சி

Posted by - July 13, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *