ss

நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு.

129 0

TRP Freeze: தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங்கை நிறுத்தி வைத்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

TRP Freeze: ஈரான் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம்.

சேன்லகளுக்கான டிஆர்பி ரேட்டிங்கை நிறுத்திய மத்திய அரசு:

செய்தி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் பாயிண்ட்களை, 4 வாரம் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில்  பரபரப்பை கூட்டும் விதமாக, உறுதிப்படுத்தப்படாத மற்றும் யூகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை சில ஊடகங்கள் வெளியிட்டு வருவதால், இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பொதுநலனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு சொல்வது என்ன?

இதுதொடர்பான அறிக்கையில், செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான ரேட்டிங் பாயிண்ட் அறிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, பார்க் (BARC) எனப்படும் பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதில், “இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில், சில செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தேவையற்ற பரபரப்பு மற்றும் ஊகங்கள் அடிப்படையிலான அறிக்கைகளை காண்பிப்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கவனித்துள்ளது, இது பொது மக்களிடையே, குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பொது நலனுக்காக, செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கான தொலைக்காட்சி ரேட்டிங் புள்ளிகளை (TRP) வெளியிடுவதை நான்கு வாரங்களுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, உடனடியாக நிறுத்தி வைக்குமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லா கட்டுவதில் சிக்கல்:

தொலைக்காட்சி சேனல்களுக்கான வருவாய் என்பது விளம்பரங்கள் மூலமே கிடைக்கிறது. அந்த விளம்பரங்களுக்கான ஒப்பந்தம் என்பது இந்த டிஆர்பி ரேட்டிங் மூலமே கிடைக்கிறது. எங்களுக்கு இத்தனை கோடி பார்வையாளர்கள் உள்ளனர், செய்தி சேனல் சந்தையில் நாங்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் எடுத்துரைக்க, பார்க் வழங்கும் இந்த டிஆர்பி எனப்படும் ரேட்டிங் புள்ளிகளே சாட்சியமாக உள்ளன. தற்போது அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு நிறுத்தி வைத்து இருப்பது முன்னணி செய்தி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சில நலிவுற்ற செய்தி சேனல்கள் தங்களுக்கு சாதகமான சூழலாக இதனை கருதுகின்றன.

தேர்தல் நேரமாச்சே..!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கள் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அராசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள் சூடுபிடிக்க தொடங்கும். 10நொடி விளம்பரங்களுக்கு எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என்பதை இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் இறுதி செய்வார்கள். தற்போது அந்த ரேட்டிங்கிற்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Post

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

நாளை சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்

Posted by - July 1, 2023 0
புதுடெல்லி: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…
s 6

Air India’s Biggest Mistake! ✈️ டெல்லி To கனடா.. ஆனா நடந்தது வேற! 🛑

Posted by - March 21, 2026 0
டெல்லியிலிருந்து கனடாவுக்கு (Vancouver) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், சுமார் 4 மணிநேரம் பறந்து சீனா வான்வெளி வரை சென்ற நிலையில், திடீரென டெல்லிக்கே திரும்பியது…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *