நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

146 0

நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீசுக்கு கண்டனம் தெரிவித்தார். தங்களின் வாக்கு வங்கியை காப்பாற்றவே திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். வாக்கு வங்கிக்காகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அதில் கையொப்பம் இட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற முடியாமல் எதிர்க்கட்சியினர் தேர்தல் முறைகளை குறை சொல்வதாகவும் அவர் விமர்சித்தார். தொடர்ந்து அமித்ஷாவின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேசிய அவர், விவாதத்திற்கு பயந்து ராகுல்காந்தியை போன்று ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை என கிண்டலடித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாதென கூறுவதா? என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பதவி கொடுக்க கூடாதென அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அமித்ஷா, இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் காரர்தான் என்று கூறினார்.

மேலும் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம் வெற்றி பெறுவது பாஜகதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். பீகாரை போல், மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் இண்டி கூட்டணி தோல்வி அடையும் என்றும் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Post

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025 0
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

Posted by - December 20, 2022 0
இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும்…

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Posted by - November 28, 2022 0
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

Posted by - April 18, 2024 0
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *