s 11

SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்

178 0

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில், எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான கால அவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க, ஏற்கனவே டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 14-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீவிரமாக நடைபெற்றுவரும் எஸ்ஐஆர் பணிகள்

நாடு முழுவதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, பீகார் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றபோதே தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எஸ்ஐஆர் பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை, வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர்.

ஏற்கனவே டிச.4 என அறிவிக்கப்பட்ட கடைசி தேதி

இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது சற்று கடினமானது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில், எஸ்ஐஆர் நடைமுறைகள் 4-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதன் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை திருப்பி ஒப்படைக்க, டிசம்பர் 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. எஸ்ஐஆர் பணிகளுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன்பின்னர், டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்

இந்நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான காலஅவகாசம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க, டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு, வரும் 19-ம் தேதி, தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் 18-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 23-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். உத்தர பிரதேசத்தில் 26-ம் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு, 31-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

விஜய்க்கு போன் போட்ட இபிஎஸ்! 30 நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை! DEAL-ஐ முடித்த பவன் கல்யாண்!

Posted by - October 8, 2025 0
விஜய்-க்கு போன் போட்ட இபிஎஸ்! வாங்க தம்பி பாத்துக்கலாம் என்ற எடப்பாடி, பொங்கலுக்கு பிறகு வரேன் அண்ணா என்ற விஜய்! அதிமுக-தவெக கூட்டணி பேச்சுவார்த்தை பின்னணியில் பவன்…
Generated Image November 20 2025 6 37PM

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

Posted by - November 20, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில்…
Gemini Generated Image gy0uv1gy0uv1gy0u

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…
tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - May 5, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95

Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? ‘U’ டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?

Posted by - June 2, 2026 0
அண்ணாமலை ஒரு திட்டத்தோடு டெல்லி சென்ற நிலையில், அங்கு அவருடைய முடிவை மாற்றும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம். பாஜகவிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *