பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்.. பாலாவை நெகிழ வைத்த சூர்யா

257 0

நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா சிவக்குமார் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஏனென்றால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். பாதி சூட்டிங் முடிந்த நிலையில் சிறு மனகசப்பின் காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது.

பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்

அந்த சமயத்தில் பாலா சூர்யாவை எந்த அளவுக்கு கொடுமை செய்தார் என பல செய்திகள் வெளியானது. ஆனால் இரு தரப்பும் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவில்லை.

அவை அனைத்துக்கும் சேர்த்து தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா பாலா இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு மேடை ஏறினார்கள்.

இதுவே அவர்களுக்குள் இருக்கும் பாசத்தை பறைசாற்றியது. அதேபோல் சூர்யா பேசும் போது நந்தா படம் இல்லை என்றால் காக்க காக்க வாரணம் ஆயிரம் என எதுவும் கிடையாது.

பாலா தான் தனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்ததாக வெளிப்படையாக பேசினார். இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் கூட அவர் பழசை மறக்கவில்லை.

நன்றி மறக்காமல் அவர் பேசிய பேச்சும் மனக்கசப்பை மறந்து விழாவுக்கு வந்ததும் பாராட்டப்பட வேண்டியது தான். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பாலா ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ச்சியுடன் இருந்தார்.

Related Post

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - December 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…

வெளிவந்து 12 வருடங்கள் ஆகும் மங்காத்தா படத்தின் மொத்த வசூல், எவ்வளவு தெரியுமா

Posted by - August 31, 2023 0
மங்காத்தா அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்தார்.   மேலும்…

“10 படங்கள் பண்ணிட்டு சினிமாவை விட்டு விலகிடுவேன்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த லோகேஷ் கனகராஜ்

Posted by - June 20, 2023 0
முதல் இரண்டு திரைப்படங்களில் சொல்லி வைத்து சிக்ஸர் அடித்ததால் மூன்றாவது திரைப்படத்திலேயே நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் கனகராஜ். 20 வருஷமெல்லாம் சினிமாவில் இருக்க…

தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

Posted by - August 15, 2023 0
மோகன் ராஜா – விஜய் வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய். இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *