‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

394 0

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

அசைவ உணவுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மட்டன். அதுவும் மட்டனை காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். முக்கியமாக சம்மரில் மட்டன் சாப்பிடுவது நமது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

  • மட்டன் – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

மற்ற பொருள்கள் :

  • நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்
  • தக்காளி – 2
  • காய்ந்த குண்டு மிளகாய் – 20
  • முழு நாட்டு பூண்டு – 2
  • கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

    செய்முறை :

    முதலில் குக்கரில் அலசிய மட்டன், மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த குண்டு மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் குண்டு மிளகாயை கரண்டி கொண்டு ஓரளவிற்கு மசித்து கொள்ளவும். அப்போதுதான் அதன் கரம் கறியில் இறங்கும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.

    தக்காளி மென்மையாக வதங்கியவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

    சில நிமிடங்கள் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி கறி நன்றாக வேகும்வரை சமைக்கவும்.

    குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

    மட்டன் நன்றாக வெந்து தண்ணீரெல்லாம் வற்றி வறுபட்டவுடன் உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அதன் பின் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.அவ்வளவுதான் சுவைமிக்க காரமான மட்டன் உப்பு கறி ரெடி…

Related Post

ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

Posted by - August 23, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி…

உங்கள் போன், லேப்டாப் மெதுவாக வேலை செய்ய இதுகூட காரணமாக இருக்கலாம்… இதை அழிங்க முதல்ல..

Posted by - January 19, 2023 0
சரி என்று கொடுத்ததும் உங்கள் சர்ச் இன்ஜின், நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உருவாக்கப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்துக் கொள்ளும். நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள் புதிதாக போன்…

IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி… 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Posted by - April 6, 2023 0
ஹெட்மேயர் – துருவ் ஜுரல் 7 ஆவது விக்கெட்டிற்கு 27 பந்துகளில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர் ஐபிஎல்…

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

Posted by - April 16, 2025 0
எதிர்நீச்சல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை…

நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா..? அதிர்ச்சியடைந்த தமன்னா

Posted by - July 27, 2023 0
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *