‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

365 0

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

அசைவ உணவுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மட்டன். அதுவும் மட்டனை காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். முக்கியமாக சம்மரில் மட்டன் சாப்பிடுவது நமது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

  • மட்டன் – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

மற்ற பொருள்கள் :

  • நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்
  • தக்காளி – 2
  • காய்ந்த குண்டு மிளகாய் – 20
  • முழு நாட்டு பூண்டு – 2
  • கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

    செய்முறை :

    முதலில் குக்கரில் அலசிய மட்டன், மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த குண்டு மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் குண்டு மிளகாயை கரண்டி கொண்டு ஓரளவிற்கு மசித்து கொள்ளவும். அப்போதுதான் அதன் கரம் கறியில் இறங்கும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.

    தக்காளி மென்மையாக வதங்கியவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

    சில நிமிடங்கள் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி கறி நன்றாக வேகும்வரை சமைக்கவும்.

    குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

    மட்டன் நன்றாக வெந்து தண்ணீரெல்லாம் வற்றி வறுபட்டவுடன் உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அதன் பின் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.அவ்வளவுதான் சுவைமிக்க காரமான மட்டன் உப்பு கறி ரெடி…

Related Post

இணையத்தை அதிர வைத்த சமந்தா.. வைரலாகும் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள்

Posted by - June 28, 2023 0
நடிகை சமந்தா இந்திய அளவில் பிரபலமான நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் பெரிதளவில் வெற்றிபெறவில்லை. அடுத்ததாக குஷி படம் சமந்தா…

ஹோட்டலில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே செய்யலாம் ரூமாலி ரொட்டி…

Posted by - March 10, 2023 0
ரூமாலி ரொட்டி மெல்லிய கைகுட்டை போன்று இருக்கும். இந்த ரொட்டி தந்தூரி வகைகளுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் தேவையான பொருட்கள் மைதா மாவு – 2 கப்…

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Posted by - December 13, 2022 0
பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 1800 கோடி வசூல் செய்த புஷ்பா 2.. எப்போது தெரியுமா

Posted by - April 6, 2025 0
புஷ்பா 2 சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

Posted by - December 11, 2023 0
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *