முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்

267 0

“கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார்.

விசிக கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. திமுக அரசுக்கு எதிராக கூட்டணி கட்சியே போராட்டத்தை அறிவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. போதாக்குறைக்கு மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்ததும் பேசுபொருளானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.தொடர்ந்து கூட்டணி குறித்து பேசியதும் இப்போது சர்ச்சையாகியுள்ளது, திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார்.இப்படியான தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Post

“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் – என்ன சொன்னார் இபிஎஸ்.?

Posted by - July 18, 2025 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆட்சி அதிகாரம் குறித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்து சூசக பதிலை கூறியுள்ளார். அவர் என்ன…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - October 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…

திருச்சியில் விஜய் வேட்பு மனு தாக்கல்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடல் 🔥 தமிழக அரசியல் சூடுபிடிக்குது!”

Posted by - April 2, 2026 0
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்,திருச்சி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள்,ஆதரவாளர்கள் திருச்சியில்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *