வீட்டுல முட்டை இருக்கா? இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு பிரமாதமா இருக்கும்..

272 0

உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் முட்டைகளை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டைகளை செய்து கொடுப்பீர்களா? இதுவரை நீங்கள் முட்டையைக் கொண்டு தொக்கு செய்துள்ளீர்களா? அப்படியானால் இன்று முட்டை தொக்கு செய்து கொடுங்கள். இந்த முட்டை தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.வீட்டுல முட்டை இருக்கா? இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு  பிரமாதமா இருக்கும்.. | Muttai Thokku Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/4 டீஸ்பூன்

* பட்டை – 1/4 இன்ச்

* கல்பாசி – 1 சிறிய துண்டு

* பிரியாணி இலை – 1

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 கப் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச்

* பூண்டு – 6 பல்

* உப்பு – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* வேக வைத்த முட்டை – 4

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை தெளித்து விட்டு கிளறி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அதற்குள் வேக வைத்த முட்டைகளை எடுத்து, அதன் நடுவே ஆங்காங்கு கத்தியால் கீறி விட வேண்டும்.

* பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறி வைத்துள்ள முட்டைகள் மற்றும் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அந்த முட்டைகளை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி, மசாலா முட்டையுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதை இறக்கினால், சுவையான முட்டை தொக்கு தயார்.

Related Post

திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?

Posted by - April 21, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று…

இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்.. தயாரிப்பாளர் காட்டம்

Posted by - April 27, 2023 0
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10…

‘மலிவான அரசியல் செய்கிறார்கள்’..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு

Posted by - September 12, 2023 0
மறக்குமா நெஞ்சம் கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.…

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா… அப்போ இந்த கோயில்களுக்கு ஒருமுறை போயிட்டு வாங்க!

Posted by - November 23, 2024 0
நமது கடின உழைப்புடன் அதிர்ஷ்டமும் சேர்ந்தால் கோடீஸ்வரராக மாறுவது என்பது கடினமான ஒன்றல்ல. ஆனால் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு சில கோவில்களுக்கு சென்று வந்தால்…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *