அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

93 0

சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர்.

சூரியன், சந்​திரன், பூமி மூன்​றும் ஒரே நேர்க்​கோட்​டில் வரும்​போது கிரகணங்​கள் நிகழ்​கின்​றன. அப்​போது நில​வின் நிழல் சூரியனை மறைத்​தால் அது சூரிய கிரகணம் என்​றும், பூமி​யின் நிழல் சந்​திரனை மறைத்​தால் அது சந்​திர கிரகணம் என்​றும் அழைக்​கப்​படு​கிறது.ஆண்​டு​தோறும் சராசரி​யாக 4 கிரகணங்​கள் வரை நிகழும். சந்​திரனை பூமி முழு​மை​யாக மறைத்​தால் முழு சந்​திர கிரகணம் எனவும், ஒரு குறிப்​பிட்ட பகு​தியை மட்​டும் மறைத்​தால் பகுதி கிரகணம் எனவும் கூறப்​படு​கிறது. பவுர்​ணமி நாளில் மட்​டுமே சந்​திர கிரகணம் நிகழும்.அந்த வகை​யில், இந்த ஆண்​டின் முதல் சந்​திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்​தது. அதை தொடர்ந்​து, 2-வது சந்​திர கிரகணம் நேற்று நிகந்​தது. இந்​திய நேரப்​படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை கிரகணம் தெரிந்​தது. அதில் முழு சந்​திர கிரகணத்தை நள்​ளிரவு 11.42 முதல் 12.33 மணி வரை காண முடிந்​தது. அப்​போது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) எனப்​படும் முழு​மை​யான அடர் சிவப்பு நிறத்​தில் சந்​திரன் காட்​சி​யளித்​தது.

ஐரோப்​பா, ஆசி​யா, ஆஸ்​திரேலி​யா, ஆப்​பிரிக்​கா, தென் அமெரிக்​கா, பசிபிக், அட்​லான்​டிக், ஆர்​டிக் உட்பட உலகின் பல்​வேறு பகு​தி​களில் இதை பார்க்க முடிந்​தது. குறிப்​பாக, இந்​தி​யா​வில் இரவு நேரம் என்​ப​தால் பல்​வேறு இடங்​களில் சந்​திர கிரகணத்தை மக்​கள் தெளி​வாக கண்டு ரசித்​தனர். தமிழகத்​தில் சில இடங்​களில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​ட​தால் பார்​வை​யாளர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

அடுத்த முழு சந்​திர கிரகணம் 2028 டிசம்​பர் 31-ம் தேதி​தான் நடை​பெறும். அதே​போல, செப்​டம்​பர் 21, 22-ம் தேதி​களில் நிகழ உள்ள பகுதி சூரிய கிரகணம் இந்​தி​யா​வில் தெரி​யாது. தெற்கு ஆஸ்​திரேலி​யா, தெற்கு பசிபிக், அட்​லான்​டிக் மற்​றும் அன்​டார்​டி​கா​வின் சில பகு​தி​களில் மட்​டுமே தெரி​யும்​ என்​பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

Posted by - May 22, 2025 0
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின்…

மீண்டும் சீண்டும் பாக்., அமைச்சர் – ”எல்லையில் ஏதாச்சும் செய்வாங்க” கண்டுக்காத இந்தியா

Posted by - October 17, 2025 0
எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக் கூடும் என்பதால் பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார். தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில்…

பாகிஸ்தானில் ஒரு கிலோ நெய் ரூ.60 ஆயிரம் கோடி- வாய் உளறி பேசிய இம்ரான்கானால் சர்ச்சை

Posted by - February 17, 2023 0
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு…

Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

Posted by - June 5, 2024 0
கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின்…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - March 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *