அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்

246 0

பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லி துவார்கா பகுதியில் வசித்து வரும் சுமார் 40 வயது பெண்மணி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்வதற்காக நிர்வாகி, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், உங்களுடைய முகவரியை கூறுங்கள் என கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண்மணி, டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கியுள்ளார்.

மேலும் அவர் வந்த மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை சமாதானப்படுத்த, டெலிவரி நிர்வாகி ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க, அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் அந்த பெண் தனியாக வசித்து வருவதும், மனஅழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

Related Post

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

Posted by - September 27, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…
sdf

கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!

Posted by - November 22, 2025 0
கிரெடிட் கார்டு EMI-ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன், அது என்ன? அதன் நன்மை என்ன? ஆபத்துகள் என்னென்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில்…

அழகாக இருந்தால் தள்ளுபடியாம்.. வரதட்சணை காரணமாக நிராகரித்த ஆண்கள்: போராட்டத்தை தொடங்கிய ஆசிரியை

Posted by - July 4, 2023 0
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *