அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு – அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?

218 0

#TNBJP #ANNAMALAI #MODI #TNPOLITICS #AIADMK #DMK #BJP #INDIA #CONGRESS #PIXELTV #PIXELMEDIA

சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜக கருத்தரங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலையின் படம் புறக்கணிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்களும் கொந்தளித்துள்ளனர்.

திருவான்மியூரில் இன்று, பாஜக தமிழ்நாடு சார்பாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்‘ தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அதற்காக வைக்கப்பட்ட பேனர்களில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படம் புறக்கணிக்கப்பட்ட சம்பவம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினார் – அண்ணாமலையின் உரசலே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது பாஜக-வில்.? பார்க்கலாம்.

தேர்தலை முன்வைத்து மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. தலைவருக்கான ரேஸில் நயினார், தமிழிசை, வானதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இருப்பதாக கூறப்பட்டது. அவரவர்கள் தங்களால் முடிந்த வரையில் தலைமையிடம் பேசிப் பார்த்தனர்.

 

இந்நிலையில், அண்ணாமலையே தலைவராக தொடர்வார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால், அண்ணாமலைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டதால், தலைமை சற்று தயங்கியது. ஏனெனில், தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என்ற நிலை உள்ளதால், கூட்டணி அமைக்கும் விதமாக, அதிமுக-விற்கு இணக்கமாக இருக்கும் ஒருவரைத் தான் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தது.

அதன்படி, அதிமுக-விற்கு நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தமிழ்நாடு தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது.

சீனியர்களுக்கு சிக்கலாக இருந்த அண்ணாமலை

அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோதே, சீனியர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததால், அவர்கள் அனைவருமே அண்ணாமலை மீது கோபத்துடனேயே இருந்ததாக கூறப்பட்டது. மேலும், பாஜக தமிழ்நாட்டை பொறுத்தவரை, அண்ணாமலை வைத்ததே சட்டம் என்பதுபோல்தான் இருந்தது.

இதனால்தான், அண்ணாமலை மீண்டும் தலைவராக வந்துவிடக் கூடாது என்பதில் சீனியர்கள் உறுதியாக இருந்துள்ளனர். அதனாலேயே, அனைவருமே தலைவருக்கான ரேஸிலும் குதித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட அண்ணாமலை – பேனரில் தவிர்க்கப்பட்ட புகைப்படம்

இந்த நிலையில்தான், தற்போது அண்ணாமலைக்கு கல்தா கொடுக்க ஆரம்பித்துள்ளனர் பாஜக தமிழ்நாடு சீனியர்ஸ். அதன் வெளிப்பாடாக, சென்னை திருவான்மியூரில் இன்று பாஜக சார்பாக நடைபெற்ற ‘ஒரே நாடு ஒரே தேர்தல்‘ கருத்தரங்க கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில், முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு கூட்டத்தில், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், நிகழ்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களில், நயினார் நாகேந்திரன், பவன் கல்யாண் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி போன்ற மாநிலத் நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அண்ணாமலையின் புகைப்படம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதனால், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

கொந்தளித்த அண்ணாமலை ஆதரவாளர்கள் – காலியான சேர்கள்

பேனர்களில் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டே அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறி கொதிப்படைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள், இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவித்து வந்தனர்.

இதையடுத்து, அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், இந்த கருத்தரங்கிற்காக ஏற்கனவே 2 ஆயிரம் நாற்காலிகள் போட்டப்பட்டிருந்த நிலையில், கூட்டம் வராமல் நாற்காலிகள் காலியாக இருந்த நிலையில், 500 நாற்காலிகளை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நாற்காலிகளை அகற்றியுள்ளனர்.

“அண்ணாமலை இல்லாமல் தேர்தலை எப்படி சந்திப்பார்கள்.?“

இப்படி, கூட்டம் காலியாக நடைபெற்ற நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில், கட்சியின் தமிழ்நாடு தலைமையை கிழித்தெடுத்து வருகின்றனர்.

அண்ணாமலையின் புகைப்படத்தை புறக்கணித்தவர்கள், யாரை வைத்து ஓட்டு கேட்கப் போவார்கள் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என சுமார் 80 பேரிடம், அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என கூறிவிட்டதாக பதிவிட்டுள்ளார். மற்றுமொருவர், இவர்களுக்கு ஓட்டு போடக் கூடாது என பதிவிட்டுள்ளார்.

பாஜக தமிழ்நாட்டை பொறுத்தவரை, அண்ணாலைக்குப் பின்னரே கட்சி எழுச்சி அடைந்தது என்பதை, பாஜக தலைமை முதல் தொண்டர்கள் வரை மறுப்பவர்கள் இல்லை. ஆனாலும், தேர்தலுக்காகவே நயினா நாகேந்திரனை தலைவராக நியமித்தார்கள். ஆனால், மக்களிடம் செல்வாக்கு மிக்க அண்ணாமலையை புறக்கணித்துவிட்டு தேர்தலை சந்திப்பது கடினம்தான் என்ற கருத்து நிலவுகிறது.

Related Post

தமிழகத்தில் நடமாடும் போதைப்பொருட்கள் – கொதிக்கும் ஓபிஎஸ்

Posted by - March 2, 2024 0
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாடும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

போலி இமெயில் முகவரி அனுப்பி சேலம் இரும்பு வியாபாரியிடம் ரூ.71.93 லட்சம் மோசடி

Posted by - August 2, 2023 0
சேலம்: சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம்…

வானிலை அலெர்ட்…!

Posted by - May 10, 2023 0
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *