அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

229 0

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் அமைப்பு கண்டனம்:

ஒற்றுமை மற்றும் வலுவான எதிர்ப்பின் வெளிப்பாடாக, பிரிக்ஸ் நாடுகள் ஈரான் மீதான சமீபத்திய ராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஒருதலைப்பட்ச வர்த்தக வரிகளை அதிகரிக்கும் குறிப்பாக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற கூட்டத்தில், உலகளாவிய வர்த்தக சிக்கல்கள், ராணுவ அதிகரிப்புகள் மற்றும் தீவிரம் குறித்த தங்களது ஒத்த கவலைகளை வெளிப்படுத்தும் வகையில், ரியோ டி ஜெனிரோ பிரகடனம் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டு அறிக்கையை பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டன. புதியதாக இணைந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டணி, அதிகரித்து வரும் பாதுகாப்புவாதத்தின் மீதான தாக்கம் குறித்து உறுதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

11 நாடுகள் சொல்வது என்ன?

கூட்டு அறிக்கையில், “வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் பெருக்கம், அதன் கண்மூடித்தனமான வரி உயர்வு மற்றும் வரி அல்லாத நடவடிக்கைகள் போன்ற வடிவங்களில் இருந்தாலும் சரி… உலகளாவிய வர்த்தகத்தை மேலும் குறைக்கவும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தவும் அச்சுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) கொள்கைகளுக்கு எதிரான ஒருதலைப்பட்ச வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியது. தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய தலைவர்கள், விதிகள் அடிப்படையிலான, திறந்த மற்றும் உள்ளடக்கிய பலதரப்பு வர்த்தக முறைக்கு ஆதரவாக தங்கள் ஆதரவை அளித்தனர். WTO கட்டமைப்பிற்குள் வளரும் பொருளாதாரங்களுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தினர்.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டம்:

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில், “பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் வலியுறுத்துகிறோம், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்கிறோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சர்வதேச முயற்சிகளை ஆதரித்து, சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுள்ளது. தீவிரவாதச் செயல்களின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு நியாயப்படுத்தலும் அவற்றை மன்னிக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம்:

ஜூன் 13 அன்று தொடங்கிய ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் தொடர்பாகவும், பிரிக்ஸ் நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன. அதில் இந்தத் தாக்குதல்களை சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் “தெளிவான மீறல்” என்று கூறிய பிரிக்ஸ், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கண்காணிப்பின் கீழ் இயங்கும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது குறித்து கடுமையான கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதுபோக சர்வதேச பாதுகாப்புகளைத் தவிர்த்து, குற்றச் செயல்களுக்கு நிதியளிக்க தீவிரவாதக் குழுக்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் நாணயங்களை – கிரிப்டோகரன்சிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும் பிரிக்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

Posted by - May 9, 2025 0
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய…

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

வீழ்த்தப்பட்ட 800 ஆண்டு பழமையான இனம்! உலகை அதிர வைத்த 21 வயது பெண் எம்பி! இது மாவோரி இனத்தின் வரலாறு

Posted by - January 6, 2024 0
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த 21 வயது பெண் முழக்கமிட்ட வீடியோ டிரெண்டாகியுள்ள நிலையில், இந்த மாவோரி இன மக்கள் யார்.அவர்கள் வரலாறு என்ன…

“பதிலடி கொடுத்தே ஆகணும்“ ட்ரம்பிடம் கூறிய புதின் – ரஷ்யாவின் அடியை தாங்குமா உக்ரைன்.?!

Posted by - June 5, 2025 0
ரஷ்யாவிற்குள் வெகு தூரம் ஊடுருவி ட்ரோன் தாக்குதலை நடத்திய உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *