BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

185 0

பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 25 இந்தியர்கள் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் கொந்தளிப்பிற்கு ஆளான இந்தியா இந்த விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்:

இதையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது இந்தியா. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பதில் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானை முறியடித்தது. மேலும்,  இந்தியா நேற்று இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்தியது.

இந்த சூழலில், இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் சுட்டு வீ்ழ்த்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல இடங்களில் இந்தியா தாக்குதலை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் ராணுவ தளபதி வீடு அருகே குண்டுவெடிப்பு:

கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளும் சரமாரியாக பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறிய பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் வீடு அருகே இந்தியா நடத்திய தாக்குதலில் குண்டு வெடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பாக பதுங்கு குழியில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் வீடு அருகேயும் இந்தியா தனது தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம் பீதியடைந்துள்ளது. பாகிஸ்தானை காட்டிலும் பன்மடங்கு பலம் வாய்ந்த இந்தியா கடல்வழியாக கராச்சியை தாக்கி வருவதாகவும், ஐஎன்எஸ் விக்ராந்த் மூலமாக பாகிஸ்தானின் கடற்படை தளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களை தாக்கியுள்ளது.

இந்தியா சரமாரி தாக்குதல்:

அதேபோல வான்படையும், ராணுவமும் இணைந்து ட்ரோன்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். எஸ்-400 ரக ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய இந்தியா ஏராளமான ட்ரோன்களையும் பாகிஸ்தான் மீது ஏவி தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் முயற்சியை வானிலே ஏவுகணைகளை வீழ்த்தி இந்தியா முறியடித்து வருகிறது.

இரு நாட்டு படையினர் இடையே மூண்டுள்ள இந்த போர் பதற்றத்தால் இரு நாட்டு மக்களும் பெரும் அச்சத்திற்கும், பீதிக்கும் ஆளாகியுள்ளனர். இந்தியா பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பகுதிகளை மொத்தமாக சூறையாட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Posted by - August 8, 2025 0
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய்…

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்

Posted by - February 21, 2023 0
டோக்கியோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன்…

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - September 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

Posted by - February 16, 2023 0
டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *