ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

253 0

தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு:

தில்லை நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் வீட்டிலும், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள அமைச்சரின் மகனும், எம்.பியுமான அருண் நேருவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  வெளியாகியுள்ள தகவல்களின்படி, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு மற்றும் திருச்சியில் உள்ள சகோதரி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் தொடர்புடைய மின் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கடந்த 2018ம் ஆண்டிலும் இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அப்போது 100 கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிவைக்கப்படும் திமுக?

கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதனை தொடர்ந்து அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான், திமுக அரசின் மூத்த அமைச்சரான கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள துரைமுருகன் வடமாவட்டங்களிலும், செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்திலும் மற்றும் கே. என். நேரு மத்திய மண்டலத்திலும் திமுகவின் முகமாக பார்க்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மூன்று பேர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனைகள் திமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டணி?

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுகவை அரசியல் எதிரியாக கொண்டு செயல்படும் கட்சிகளை தங்களது தேசிய கூட்டணியில் கொண்டு வர பாஜக முயல்கிறது. இதுதொடர்பாக அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, உள்துறை அமைச்சரான அமித் ஷா சந்தித்து பேசியிருந்தார். இதுபோக திமுகவை எதிர்த்து தீவிரமாக களமாடி வரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம் தங்களது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டே, மறுபுறம் திமுக கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் பணியில் பாஜக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே அடுத்தடுத்து அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Post

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…
tvk vijay 3

TTV Dhinakaran: ”விஜயின் இமேஜை உடைக்கணும்” போலி கடிதம் கொடுத்ததா தவெக? – டிடிவி தினகரனின் புகரால் பரபரப்பு

Posted by - May 9, 2026 0
TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜயின் இமேஜை உடைக்கும் வகையில், அவர் குதிரை பேரம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். TTV…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சொன்ன யோசனை

Posted by - January 3, 2023 0
பொங்கல் பண்டிகை | ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். பொங்கல்…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026 0
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *