Generated Image January 13 2026 8 16PM

ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

82 0

சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?

சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று, அதன் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி வெளியிட்டார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியான கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.

“தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடியாக மாறும்“

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறியதோடு, ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் என்று கூறினார்.

“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டது.?“

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பு குறித்து பேசிய அவர், இலவச பயணத்தை ஆண்கள் கேட்டார்களா என கேள்வி எழுப்பினார். மேலும், ஏற்கனவே போக்குவரத்துத் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பில் செல்வதாகவும், இப்போது இந்த செலவை எங்கிருந்து எடுப்பார்கள் என்றும், இது நல்ல திட்டமா, நஷ்டமா என கேள்வி எழுப்பினார்.

இலவச பேருந்து பயணம் என கூறும் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துடன் அந்த பேருந்தில் செல்வாரா.? அந்த அளவிற்கு பேருந்து தரமாக இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய சீமான், இப்போது ஓடும் பேருந்துகள் கைலான் கடை இரும்பு போல் உள்ளதாக விமர்சித்தார்.

மேலும், ஏற்கனவே இலவசமாக பயணிக்கும் பெண்களிடம், நீ ஓசியில் தானே வருகிறாய், அப்படி ஓரமாக போய் நின்றுகொண்டு வா என்று பேருந்துகளில் கூறுவதை கேட்டதில்லையா என்றும் சீமான் வினவினார்.

“ஆக்கப்பூர்வமான திட்டத்தை சொல்லுங்கள்“

அதேபோல், வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விமர்சித்த அவர், ஏற்கனவே இரு ஆட்சிகளிலும் கோழிக் கூடு போல் வீடு கட்டிக் கொடுக்கப்படுவதாகவும், அவர்கள் யாராவது அந்த வீட்டில் போய் இருப்பார்களா என்றும் கேட்டார். மேலும், புதிதாக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டத்தை சொல்லச் சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

“மகளிர் வருவாய் ஈட்டும் அளவிற்கு வேலை கொடுங்கள்“

அதோடு, இலவச பேருந்து அல்லாமல், தரமான பேருந்தை வழங்கி, அதில் கட்டணம் செலுத்தி செல்லும் அளவிற்கு வசதியை மக்களுக்கு தரச் சொல்லுங்கள் என்று கூறினார். மேலும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம் வழங்காமல், 20 ஆயிரம் ரூபாய் ஈட்டும் அளவிற்கு தாய்மார்களுக்கு வேலை வழங்கச் சொல்லுங்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.

Related Post

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…
image 1

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…
Generated Image February 09 2026 3 52PM

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…
dfghj

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *