கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

143 0

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் தான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா, அவரது மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமையாக வந்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை, கட்சிக்குள் ஏற்பட்ட நிகழ்வு போன்றவை காரணமாக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 5 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்த அவர், தற்போது கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். பெயர் அறிவிக்கப்படாத நிலையில், கொடி மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சசிகலாவிடம், “நீங்கள் அரசு ஊழியர் கிடையாது.  ஆனால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள். ஜெயலலிதாவோடு இருந்த தொடர்பை பயன்படுத்தி இன்றளவும் செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ இது திட்டம் போட்டு வெளியில் இருந்து பரப்பப்படும் விஷயமாகும். ஜெயலலிதா 1991-1996ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்தார். அப்போது ரூ.1 சம்பளம் பெறுவேன் என கூறியதையே கொச்சைப்படுத்தினார்கள். 1 ரூபாய் வாங்கி என்ன பண்ணுவாங்க என தெரிவித்தார்கள். நாங்கள் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு முன்னால் சில நிறுவனங்களை நடத்தி வந்தோம். அதில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்து வந்தோம்.

அப்போது திமுக அரசு 13 வழக்குகள் போட்டது. அதற்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுக்கும் வழக்கு நடத்த பணம் செலவழிக்க வேண்டும். இதற்கான பணம் எங்கள் நிறுவனங்களில் இருந்து தான் சென்றது. வருமான வரித்துறை தாக்கலில் எதற்கெல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியும். நான் ஒரு அரசு ஊழியர் கிடையாது. தனிப்பட்ட நபர். நான் ஒரு நிறுவனத்தை நடத்தக்கூடாது என எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தனியாக தொழில் செய்யவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்.

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை இந்த வழக்கில் இணைத்து விட்டார். ஒரு அரசு ஊழியர் ஊழல் செய்து விட்டார் என வழக்கு தொடர்ந்தால் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் சிக்க வைக்கப்படலாமா?, குடும்ப உறுப்பினர்களால் தனியாக சம்பாதிக்க முடியாதா?

நான் நடத்திய நிறுவனங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வரவு -செலவுகளை மேற்கொண்டோம். யாருக்கும் இப்படி வழக்கு போடவில்லை. இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டவை. சசிகலா உடன் இருப்பதால் தான் இவ்வளவு சிக்கல். இல்லாவிட்டால் திமுக தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம் என கருணாநிதி நினைத்தார்” என சசிகலா கூறியுள்ளார்.

Related Post

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Posted by - April 15, 2026 0
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து,…

’தேமுதிக, திமுக பக்கம் வந்தது எப்படி?’

Posted by - February 19, 2026 0
’அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நேரத்தில், கடைசி நேரத்தில் களத்தில் குதித்த திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்காக கூட்டணி கணக்கையே மாற்றியிருக்கின்றனர்’ எந்த…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

Posted by - August 21, 2025 0
மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று…

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

Posted by - July 18, 2025 0
பாஜகவுடன் உறவை முறித்துக் கொண்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியே கற்பனையானது என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *