ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

204 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.Andhra Pradesh: Woman finds Diamond while working in the farm at Jonnagiri  of Kurnool

வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது. இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாக கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி

Posted by - February 23, 2023 0
ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலம் பிரிஜ்நகரில் அஸ்லம் (வயது 24), ககாஷா பானு (வயது 22) ஆகிய இருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. அவர்களின் திருமண வரவேற்பு…

விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

Posted by - December 6, 2023 0
அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி. 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா.…

அதிதீவிர புயலான பிபோர்ஜாய் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்: 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

Posted by - June 10, 2023 0
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *