குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் பரிசு..

122 0

குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் ஆர்வம் காட்டினர்.

பீகார் மாநிலத்தில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்து ஆண்களிடம் மிகப்பெரிய அளவில் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் நாளுக்கு நாள் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் விசித்திரமான முறையில் மோசடி நடைபெற்றுள்ளது. அங்கு நவாடா நகரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ‘அகில இந்திய கர்ப்பிணி வேலை’ என்ற பெயரில் ஆன்லைன் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் குழந்தை இல்லாத  ஒரு பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இலவச  பாலியல் உறவு மற்றும் பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் பல்வேறு ஆண்களும் இதில் கலந்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

காரணம், இந்த விஷயத்தில் கலந்து கொள்ளும் நீங்கள்  தோல்வியடைந்தாலும், பாதி பணம்   கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதற்காக ஒரு குறிப்பிட்டத்தக்க தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு பெண் மாடல்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டு மேலும் ஆசையை அந்த கும்பல் தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பதிவு கட்டணம், ஹோட்டல் கட்டணங்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கட்டணங்களை இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களிடம் பல்வேறு முறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்தை ஈஸியாக பெறலாம் என நம்பி பலரும் பணத்தை செலுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த பணம் கரைந்ததை உணர்ந்த ஆண்கள், தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினரை அணுகினால் வீணாக நம்முடைய பெயர் அல்லது குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படலாம் என்பதால் யாரிடமும் வாயை திறக்காமல் இருந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் சென்ற நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் நவாடாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியில் நான்கு மொபைல் போன்கள் பயன்படுத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பாலியல் தேடும் அனைத்து வயது ஆண்களையும் கவர்ந்திழுக்கும் ஒரு கும்பல் நவாடா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் இதுபோன்ற கவர்ச்சிகரமான மற்றும் நம்ப முடியாத கூற்றுகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Related Post

கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

Posted by - February 29, 2024 0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி…

இந்தியாவில் மேலும் 156 பேருக்கு கொரோனா- புதிய உயிரிழப்பு இல்லை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக…

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

Posted by - April 14, 2024 0
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம்…

இன்று லாபமழை பொழியப்போகும் டாப் 5 பங்குகள் இவைதான்.. நிபுணர்கள் பரிந்துரைப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

Posted by - August 23, 2024 0
பங்குச் சந்தையின் கடைசி நாளான இன்று சில பங்குகள் சந்தை இயக்கச் சக்திகளால் லாபத்தை கொடுக்கும். இல்லையெனில் முந்தைய நாள் அதிக லாபத்தை பதிவு செய்து, இன்று…

பணக்கார பிச்சைக்காரர்…மாத வருமானம் ரூ 75000…நிகர சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடியாம்…!

Posted by - December 10, 2024 0
Bharat Jain The Indian Richest Beggar – பாரத் ஜெயின், மும்பையில்  வசிப்பவர்களுக்கு இவரை நிச்சயம் தெரிய வாய்ப்பு இருக்கிறது, மக்கள் அதிகமாக கூடும் சத்ரபதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *