இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

221 0

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. பணி நீக்க நடவடிக்கைகள் இந்தியாவில் இருக்காது என்றாலும், டிசம்பர் மாதத்தில் அதிகரித்து, பின்னர் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் தற்போது அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

டிசம்பர் மாதத்தில் 8.30 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், இந்தாண்டு ஜனவரியில் 7.14 சதவிகிதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்த நிலையில், மார்ச் மாதத்தில் 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவிகிதமாகவும், குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.8 சதவிகிதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவிகிதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது.

பண்டிகை காலத்திற்குப் பிறகு, சில்லறை விற்பனை, விநியோகம், நிதி சேவை உள்ளிட்ட துறைகளில் பணியாளர்களுக்கான தேவை குறைந்ததே, வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. ஐ.டி. துறையில் புதிய வேலைவாய்ப்பு உருவாகாததும், தேர்வுக் காலம் என்பதால் சுற்றுலாத் துறை தொய்வு அடைந்திருப்பதும், மற்ற காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஆனால், உட்கட்டமைப்பு, பொறியியல், கட்டுமானத் துறைகள் காரணமாகவே ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, விரைவில் இந்த சிக்கல்களில் இருந்து மீண்டு வர அதிக வாய்ப்புள்ளதால், புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாகும் என துறை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Post

cheapest cars in india

சராசரி மக்களுக்கு ஏற்ற மலிவு கார் எது?

Posted by - January 6, 2026 0
இந்தியாவில் தற்போது கிடைக்கும் குறைந்த விலை Top 5 கார்கள் – முழு விவரம் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் பட்ஜெட்…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன.…

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் காலமானார்..

Posted by - August 15, 2025 0
நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *