ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

236 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வு காண கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி | Tamil  News wrong vaccine kills over 100 stray dogs in AP village

நாய் தொல்லை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். பஞ்சாயத்து ஊழியர்கள் கிராமங்களில் உள்ள நாய்களை பிடித்து கூண்டுகளில் அடைத்தனர். 100-க்கும் ஏற்பட்ட நாய்கள் பிடிக்கப்பட்டன. போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பஞ்சாயத்து ஊழியர்களால் பிடிக்கப்பட்டு ஊசி போடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இறந்தன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. கலெக்டர் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனையடுத்து பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Related Post

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

வந்தது ஆதார் அப்டேட் – எல்லாமே ஈசி, இன்று முதல் புதிய விதிகள் அமல் – இனி கட்டாயமும், கட்டணமும்

Posted by - November 1, 2025 0
Aadhaar Updates: ஆதார் கார்ட் அப்டேட் அல்லது மாற்றங்களை செய்ய இன்று (நவ.1) முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. Aadhaar Updates: ஆதார் கார்ட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *