இன்ஸ்டாவில் பழக்கம்: ரூம் போட்டு பிரிட்டிஷ் தோழியிடம் இந்தியர் செய்த லீலை! டெல்லியில் பரபரப்பு

201 0

சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன

டெல்லி ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களால் எந்த அளவுக்கு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்துகளும் சூழ்ந்திருக்கின்றன. இதனால் அறியாமையால் பல தவறுகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் நட்பாகப் பழகிய ஒருவரைச் சந்திக்க டெல்லிக்கு வந்த பிரிட்டிஷ் குடிமகள், மஹிபால்பூர் ஹோட்டலில் அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைலாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த கைலாஷ் என்பவருக்கும் பிரிட்டிஷை பூர்வீகமாக கொண்ட ஒரு இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாவில் நன்றாக பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தப் பெண் விடுமுறையை ஒட்டி சுற்றுலா செல்ல ப்ளான் செய்துள்ளார். அப்போது இந்தியா செல்லலாம் என முடிவு செய்துள்ளார். எனவே இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கோவாவை விடுமுறைக்காக சுற்றுலா இடமாக தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து இந்தியா வந்த அந்த பெண் கைலாஷுக்கு போன் செய்து தன்னுடன் ட்ரிப்பில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் கைலாஷ் பயணம் செய்ய முடியாது என்று கூறி டெல்லிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை டெல்லியை அடைந்து மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். பின்னர் அவர் கைலாஷுக்கு போன் செய்தார், அவர் தனது நண்பர் வாசிமுடன் ஹோட்டலுக்கு வந்தார். அன்று இரவு அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மறுநாள் காலை, அந்தப் பெண் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். வழிகாட்டுதல்களின்படி, இந்த சம்பவம் குறித்து பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்திற்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர், மேலும் அவர்கள் இங்கிலாந்து நாட்டவருக்கும் உதவி செய்து வருகின்றனர்.

கைலாஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் போலீசாரிடம், கைலாஷ் ஆங்கிலம் பேச சிரமப்பட்டதாகவும், தன்னுடன் தொடர்பு கொள்ள கூகிள் மொழிபெயர்ப்பை அவர் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

Related Post

8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

Posted by - July 29, 2023 0
கொல்கத்தா : மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள்…

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Posted by - April 21, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…

‘தமிழக வெற்றி கழகம்’ நடிகர் விஜயின் கட்சி பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - February 2, 2024 0
நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr —…

தொப்பை இருக்கா.. தப்பி தவறியும் இந்த 2 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! பெரிய பிரச்சினையாகிடும்

Posted by - December 15, 2023 0
டெல்லி: உடல் எடையைக் குறைக்க முயல்வோர் நிச்சயம் சில வகை உணவுகளை ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.…

அம்பேத்கரை அவமதித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Posted by - April 15, 2024 0
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அம்பேத்கரின் கொள்கையை உண்மையில் அமல்படுத்தி உள்ளோம். காங்கிரஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *