ஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

150 0

பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், வருகிற 24 ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை வாக்குறுதியை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் லாங்ஸ் தோட்ட சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக சென்றனர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்தார்கள். அப்போது கருணாநிதி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடு கலைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 வருடங்களை கடந்த நிலையில், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைவதற்கு குழு அமைத்தனர். தற்பொழுது அந்த குழுவும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

இவர்களுக்கு தரமான ஆசிரியர்கள் வேண்டும். ஆனால், தகுதியான ஆசிரியர்களுக்கு தேவையான ஊதியத்தை வழங்க முடியாது. பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது. பிற மாநிலங்களில் வழங்குவது விட குறைந்த ஊதியத்தை எங்களுக்கு வழங்குகின்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்களின் ஊதிய முரண்பாடு தீர்க்காவிட்டால், வருகிற 24 ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம், மறியலில் ஈடுபட உள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் வரை போராட்டம் தொடரும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

எத்தனை அடக்குமுறை வந்தாலும், வீட்டுக்காவலில் வைத்தாலும் போராட்டம் தொடரும். அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

Related Post

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…

வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

Posted by - December 26, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல்…

இன்று வெயில் அதிகரிக்கும்… மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!

Posted by - May 15, 2023 0
தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று…

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

கைகள், தோள்பட்டை, கால்களுக்கு வலிமை தரும் அர்த்த பூர்வோத்தானாசனம்

Posted by - March 10, 2023 0
அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *