எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

125 0

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரியாத்தை நோக்கிச் சென்ற ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது. மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகள் முஹாரக் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், தெஹ்ரானின் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமையன்று தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகள் சரிந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதலாக இது கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில் உள்ள முக்கிய தளபதிகளை குறிவைத்து, பெய்ரூட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் துல்லியமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று (மார்ச் 8) ஈரான் முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியது. லெபனானின் சுகாதார அமைச்சகம், ஹோட்டலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் ‘நாங்கள் முழு பலத்துடன்’ தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்,

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (மார்ச் 8) தங்களால் தற்போதைய சண்டை வேகத்தில் ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை நடத்த முடியும் என்று கூறியது. ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “ஈரான் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது, ஆனால் வரும் நாட்களில் மேம்பட்ட மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும்” என்றார்.

Related Post

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு

Posted by - November 4, 2023 0
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

பாக்., இல்ல பிரச்னையே சீனா தான் – என்னெல்லாம் செய்றாங்க தெரியுமா? இந்தியாவை எச்சரித்த அமெரிக்கா

Posted by - May 26, 2025 0
இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தான் துணை பாதுகாப்பு பிரச்னை மட்டுமே என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ”பாகிஸ்தானை வளர்த்துவிடும்…

பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் – ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

Posted by - September 1, 2025 0
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல்…

எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்…

Posted by - May 7, 2025 0
இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக,…

“தற்கொ**** எண்ணத்துடன் ChatGPT உடன் பேசும் லட்சக்கணக்கானோர்“; OpenAI வெளியிட்ட பகீர் தகவல்.!

Posted by - October 29, 2025 0
chatGPT உடன் உரையாடும் லட்சக்கணக்கானோர் தற்கொலை எண்ணத்துடன் பேசுவதாக OpenAI நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ChatGPT-ஐ உருவாக்கும் OpenAI-ன் தரவுகளின்படி, அதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *