image 5

எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

201 0

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரியாத்தை நோக்கிச் சென்ற ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது. மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஏவுகணைகள் முஹாரக் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடத்தின் மீது விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்ததாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், தெஹ்ரானின் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கை அமெரிக்காவும், இஸ்ரேலும் சனிக்கிழமையன்று தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகள் சரிந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதலாக இது கூறப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில் உள்ள முக்கிய தளபதிகளை குறிவைத்து, பெய்ரூட்டின் ஒரு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் துல்லியமான தாக்குதலை நடத்திய இஸ்ரேல் ராணுவம், இன்று (மார்ச் 8) ஈரான் முழுவதும் புதிய தாக்குதல் அலைகளைத் தொடங்கியது. லெபனானின் சுகாதார அமைச்சகம், ஹோட்டலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுக்கு எதிரான போரில் ‘நாங்கள் முழு பலத்துடன்’ தொடர்ந்து ஈடுபடுவதாக உறுதியளித்துள்ளார்,

இந்தச் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல்படை இன்று (மார்ச் 8) தங்களால் தற்போதைய சண்டை வேகத்தில் ஆறு மாதங்களுக்கு தீவிரமான போரை நடத்த முடியும் என்று கூறியது. ஈரான் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, “ஈரான் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது, ஆனால் வரும் நாட்களில் மேம்பட்ட மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும்” என்றார்.

Related Post

பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் – ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

Posted by - September 1, 2025 0
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல்…

செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல் – 21 ஏவுகணைகளை வீழ்த்திய அமெரிக்கா

Posted by - January 10, 2024 0
மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று ஏமன் (Yemen). 90களில் ஏமன் நாட்டில் உருவானது ஹவுதி (Houthi) எனப்படும் பயங்கரவாத அமைப்பு. கடந்த அக்டோபர் 7…

பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Posted by - January 6, 2025 0
மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில்…

ஆங்கிலப் புத்தாண்டு: முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

Posted by - December 31, 2023 0
சென்னை: உலகம் முழுவதும் நாளை (ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய…

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்

Posted by - February 21, 2023 0
டோக்கியோ: உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *