எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்…ஆவேசமாக பேசிய இளையராஜா

206 0

யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் செய்துகொண்டிருக்கும் எனக்கு கர்வம் இல்லையென்றால் வேறு யாருக்கு வரனும் என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

இளையராஜ

உலகளவில் இசைத்துறையின் மாபெரும் ஆளுமையாக கருதப்படுபவர் இசைஞானின் இளையராஜா. 1500 க்கும் மேற்பட்ட படங்கள் 5000 பாடல்கள் என தனது வாழ்நாளை இசைக்காக அர்பனித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வரை ரசிகர்களை தன்வசப்படுத்தினார். தற்போது இந்தியாவில் முதல்முறையா சிம்ஃபனி ஒன்றை உருவாக்கியுள்ளார் இளையராஜா. இசையில் மேதையாக கருதப்படும் இளையராஜாவின் பேச்சுக்கள் பல சமயங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அவரது கருத்துக்களுக்கு ஆதரவும் எதிர்வினைகளும் சம அளவில் இருந்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜா பேசியுள்ளது மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எனக்கு ஏன் கருவம் இருக்கக் கூடாது ?

” உங்களை கட்டிப்போட வேண்டும் என்று நான் இசையமைக்கவில்லை. நான் ஒரு ட்யூனை உருவாக்குகிறேன் அது உங்களுக்கு இசைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக தெரிகிறது. வயிற்றில் அசைவே இல்லாத ஒரு குழந்தைக்கு என்னுடைய இசை உயிரை கொடுத்திருக்கிறது. சிங்கப்பூரில் பெண் ஒருவரின் குழந்தை வயிற்றில் குழந்தை அசையாமல் இருந்திருக்கிறது. அந்த பெண் திருவாசகம் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். திருவாசகம் கேட்டது அந்த குழந்தைக்கு உயிர் வந்திருக்கு. தூக்கம் இல்லாமல் மதம் பிடிக்கும் எல்லைக்கு போன கோயின் யானை என்னுடைய தாலாட்டு பாட்டை கேட்டு தூங்கியிருக்கு. மலைப்பகுதியை ஒட்டிய ஒரு தியேட்டரில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது நான் இசையமைத்த ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாட்டு ஓடுகிறது. அந்த பாட்டைக் கேட்க ஒரு பெரிய யானை கூட்டம் வந்து அந்த பாட்டை அமைதியாக கேட்டு திரும்பி செல்கிறது. உலகத்தில் எந்த இசையமைப்பாளருக்காவது இப்படி நடந்திருக்கா. இதை எல்லாம் நான் சொன்னால் எனக்கு தலைக்கனம் அதிகம் என்று சொல்வார்கள். எனக்கு வராமல் வேற எவனுக்குடா வரும்..எனக்குதான் கர்வம் அதிகம் இருக்கனும். ஏனால் உலகத்தில் யாராலும் செய்ய முடியாததை நான் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு திமிரு இல்லாமல் எப்படி இருக்கும். ஆனால் எனக்கு திமிரு இல்லை . எனக்கு திமிரு என்று சொல்பவனுக்கு எவ்வளவு திமிரு இருக்கனும். விஷயம் இருக்கவன்கிட்ட கர்வம் இருக்காதா? ” என இளையராஜா பேசியுள்ளார்

Related Post

கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்! பூதாகரமான பண விவகாரம்!

Posted by - November 12, 2024 0
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பலகார கடையை அடித்து நொறுக்கிய திமுக கவுன்சிலர். மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில்…

ஒரு மாதம் டீ குடிப்பதை தவிர்த்தால் என்ன ஆகும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க

Posted by - March 15, 2024 0
ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி…

ஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

Posted by - December 5, 2025 0
பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்…

என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்

Posted by - August 29, 2025 0
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

Posted by - January 8, 2024 0
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *