”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

297 0

#kadavulae #Ajithae : என்னை ”கடவுளே அஜித்தே” என கூப்பிடுவது ,என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்

கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க என்றும் யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்க குடும்பத்தை கவனியுங்கள் என்றும் நடிகரும் கார் ரேசருமான அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”கடவுளே அஜித்தேனு” – அழைக்காதிங்க:

நடிகர் அஜித்தை, அவரது ரசிகர்கள் தல என்று அழைத்து வந்தனர். இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு அஜித் தெரிவித்ததாவது , “ தல என்று அழைக்க வேண்டாம் , என்னை அஜித் அல்லது Ak என அழையுங்கள் என கூறினார்.

இந்நிலையில், சமீப காலமாக அவரது ரசிகர்கள் கடவுளே என அழைக்க அழைக்க ஆரம்பித்தனர். மேலும், பொது இடங்களில் கூட, கடவுளே அஜித்தே என்று கோசங்களும் எழுப்ப ஆரம்பித்தனர். இது பெரும் புழக்கத்துக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த தருணத்தில் , கடவுளே அஜித்தே என அழைக்க வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்ததாவது, “ 

சமீபகாலமாக, முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் கூட அஜித்தே ‘என்ற இந்த கோஷம் என்னைக் கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில், நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்

எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும், இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! “ என நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!

Related Post

அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

Posted by - May 2, 2023 0
அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர்…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

Posted by - June 30, 2023 0
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *