கருவாடு கடை…மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்…!

217 0

முதலில் கருவாடு கடை ஏன் என்றால், மீன் என்பது அனைவருக்குமே பிடித்தமான ஒரு உணவாக கருதப்படுகிறது, அதிலும் எந்த வித கெமிக்கல்களும், எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உடலுக்கு நன் ஊட்டச்சத்தை தரும் உணவு வகைகளுள் மீன் குறிப்பிடத்தக்க உணவாக பார்க்கப்படுகிறது, அந்த வகையில் கருவாடும் ஒரு ஆகச்சிறந்த உணவு வகைகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.பொதுவாக வீட்டில் மீன் குழம்பு என்றாலும், கருவாடு குழம்பு என்றாலும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு குழம்பு வைக்க தேவை இல்லை, காரணம் சுட வைத்து சுட வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிடலாம், அதிலும் கருவாடின் சுவை என்பது நாள் அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகும், சரி அந்த வகையில் கருவாடு கடை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
பொதுவாக கருவாடு என்பது உலர்த்தப்பட்ட மீன் அவ்வளவு தான், ஒரு உணவோ பண்டமோ மீனோ அதை நன்கு சூரிய ஒளியில் உலர்த்தி உப்பிட்டு பதப்படுத்திடும் போது அதில் பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவைகள் ஆக்கிரம்படாமல் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும், அப்படித் தான் கருவாடும், நீங்களாக தயாரிக்க போகிறீர்கள் என்றால் மீன்களை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.

பின்னர் வெட்டி உலர்த்தி உப்பு போட்டு பதப்படுத்தி, மீன் மார்க்கெட்டுகள் அல்லது ஏதாவது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடையாகவோ அல்லது தள்ளு வண்டிகள் மூலமாகவோ விற்கலாம், 10 ரூபாய் பாக்கெட்டுகள் போட்டு மொத்த கடைகளுக்கும் கொடுக்கலாம், ஒரு சிறிய கடுவாடு கடை வைக்க குறைந்தபட்சம் ஒரு 30000 முதலீடு கையில் இருந்தால் போதும்,

கட்டா பாறை, தேங்காய் பாறை, மஞ்சபாறை, கடல் விரால், சீலா, தேடு, சுறா, பால் சுறா, சூரை, பெரும்செல்லா, வாளை, விளமீன் மற்றும் வாவல் போன்ற மீன்களை தனித்தனியாக வெட்டி பதப்படுத்தி கருவாடு செய்ய வேண்டும், மொத்தமாக குழப்பி துண்டு கருவாடு செய்தால் அதன் சுவை மாறி விடும், தொழில் நன்கு பிக் அப் ஆகும் பட்சத்தில் மாதம் ரூ 60000 வரை வருமானம் பார்க்கலாம்.

முறையான விற்பனைக்கான ஆவணங்கள், உணவு விற்பனைக்கான லைசென்ஸ், ஏற்றுமதிக்கான ஆவணம், GST எல்லாம் பதிவு செய்து வைத்து இருந்தால் வெளிநாடுகளுக்கும் உங்கள் கருவாடுகளை ஏற்றுமதி செய்ய முடியும், நீங்கள் முதலில் சிறியதாக சந்தைப்படுத்திவிட்டு உங்களுக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏற்றுமதி குறித்து யோசிக்கலாம்.

Related Post

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

குழந்தைகள் ஜாக்கிரதை – வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி – நோய்க்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பது எப்படி?

Posted by - February 8, 2025 0
தமிழ்நாட்டில் மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், தடுப்பது எப்படி மற்றும் சிகிச்சை…

பெண்களுக்கான ஜாக்பாட் – ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி – யாருக்கு கிடைக்கும்?

Posted by - December 15, 2024 0
TAHDCO Loan Scheme: மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் (Mahila Adhikarita Yojana) கீழ் கிடைக்கும், மத்திய அரசின் கடனுதவி திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். மகளிருக்கு…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - December 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…

406 வாழை மரங்களை வெட்டி சாய்த்த மின்வாரிய அதிகாரிகள்… அதிர்ச்சியில் விவசாயிகள்!

Posted by - August 8, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் வாரப்பெட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் கடந்த 50 ஆண்டுகளாக வாழை விவசாயம் செய்துவருகிறார். வரும் ஓணம் பண்டிகைக்கு நல்ல விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *