கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

199 0

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தேர்தல் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், கட்சி தலைவராக தான் என்ன செய்ய வேண்டும், கட்சி தலைமை மேல் உள்ள குறைகள் என்ன என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தயாளர்களை சந்தித்த அக்கட்சியின்  துணைத்தலைவர் மௌரியா, ”  கமல்ஹாசனின் சிந்தனையோடு ஒத்துப் போகக் கூடிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி  அமைக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாத சூழலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Post

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் தொல்.திருமாவளவன்

Posted by - September 16, 2024 0
“கூட்டணியில் இருப்பதும், அதிலிருந்து வெளியேறுவதும் சுதந்திரமான ஒரு முடிவு. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளுக்கும் உள்ளது” என குறிப்பிட்டார். விசிக…

அரசியலில் தனித்து விடப்பட்டதால் அந்தர் பல்டி.?!

Posted by - February 21, 2026 0
அரசியலில் தனித்து விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், விபரீதமான முடிவு ஒன்றை எடுக்க உள்ளதுபோல் தெரிகிறது. இன்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய அவர், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும்…

பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?

Posted by - July 18, 2025 0
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் .N.D.I., கூட்டணி ஆலோசனைக் கூட்டம் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, I.N.D.I.,…

பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!

Posted by - January 9, 2026 0
ஜனநாயக உரிமைகள் பற்றி வாய்கிழியப் பேசும்  திமுக, பகுதி நேர ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவதைக் கூட அனுமதிக்காமல் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது – அன்புமணி. பணி நிரந்தரம்…

திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு – இது தான் காரணமா.?

Posted by - November 4, 2025 0
சர்ச்சை பேச்சு காரணமாக திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *