‘கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு பதில் சொன்ன EPS’ பரபரப்பு Press Meet!

136 0

அதிமுக கூட்டணி வலிமையானதாகவும், ஒற்றுமையுடன் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான அரசு 2026 அமைந்தால், அது கூட்டணி ஆட்சியாகதான் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பேசிய நிலையில், அதற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து பேசி வந்தனர். இந்நிலையில், இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா கருத்துக்கு நேரடியாக எந்த பதிலையும் சொல்லாமல், இருந்தாலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், தனித்தே அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், கூட்டணி வலிமையானதாகவும் ஒற்றுமையுடனும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

திமுக மீது இபிஎஸ் விமர்சனம்

திமுக முன்னெடுத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களின் குறைகளை தீர்க்காமல், தேர்தல் வர இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில்ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, குறைகளை நிவர்த்திச் செய்வதாக சொல்லி, பொய் பிரச்சாரத்தில் திமுக இறங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியில் புதிய கட்சியா ?

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், இன்னும் பலமான கூட்டணியை அதிமுக உருவாக்கும் என்றும், தங்களுடைய கூட்டணியில் புதிய கட்சிகள் பல வந்து சேரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கனிம வளம் மூலம் அரசு கொள்ளை

கனிம வளம் மூலம் திமுக அரசு அதிகமாக கொள்ளையடித்துக்கொண்டிருப்பதாகவும், கனிம வளத்துறையை வைத்தே அதிக கொள்ளை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றும் பேசியுள்ளார். மேலும், திமுக ஆட்சி நிச்சயம் 2026 மீண்டும் வராது என்றும், அதற்காகதான் தொகுதி வாரியாக சென்று மக்களை தான் சந்தித்து வருவதாகவும் சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் அமோக வரவேற்பு

தான் சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தனக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருவதாகவும் அந்த வரவேற்பே மீண்டும் 2026ல் அதிமுக ஆட்சிக்கு வருவதை பிரதிபலிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்

Posted by - March 24, 2025 0
மதுரையில் காவலர் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக போலீசார் துப்பாக்கிச்சூடு…
அரசு வேலை இலவச பயிற்சி

அரசு வேலை போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - December 18, 2025 0
அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள், அரசு வேலை தேர்வுகளுக்கு…

ஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

Posted by - December 5, 2025 0
பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட்…

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

ஓபிஎஸ் தாயார் ஓ.பழனியம்மாள் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

Posted by - February 25, 2023 0
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *