TAMILNADU BJP

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

32 0

மதுரை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி காரண​மாக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பதவி விலக அண்​ணா​மலை ஆதர​வாளர்​கள் குரல் எழுப்​பத் தொடங்கி உள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து 27 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிட்​டது. இதில் உதகை தொகு​தி​யில் மட்​டும் பாஜக வேட்​பாளர் 976 வாக்​கு​கள் வித்தியாசத்தில் வெற்​றி​பெற்​றார். சாத்​தூரில் போட்​டி​யிட்ட பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்ட அனை​வரும் தோல்​வியைத் தழு​வினர்.

இந்​தத் தேர்​தலில் பாஜக 14 லட்சத்து 67,024 வாக்​கு​களைப் பெற்று 2.97 சதவீத வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது. கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பாஜக தனித்​துப் போட்​டி​யிட்டு 11.24 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இந்​தத் தேர்​தலில் பெரிய கட்​சிகளு​டன் கூட்​டணி அமைத்​தும் வாக்கு சதவீதம் கணிச​மாகக் குறைந்​துள்​ளது.

தமிழக பாஜக கூட்​டுறவு பிரிவுத் தலை​வர் மகா சுசீந்​திரன் படத்​துடன், ‘சாணக்​கியர் சறுக்​கி​னாரோ என்ற தலைப்​பிலான அறிக்கை பாஜக​வில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த அறிக்கை நயி​னார் நாகேந்​திரனை குறை​கூறும் வகை​யிலும், அண்​ணா​மலை​யைப் பாராட்​டும் வகை​யிலும் அமைந்​துள்​ளது.

அந்த அறிக்கையில் கூறப்​பட்​டிருந்​த​தாவது: பாஜக​வின் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களின் உழைப்பு 2026 தேர்​தலில் அடை​யாளம் இல்​லாமல் காற்​றில் கரைந்​துள்​ளது. தமிழகத்​தில் பாஜக​வின் 3 சதவீத வாக்கு வங்கி 2021-ல் 18 சதவீத​மாக உயர்ந்து இரு பெரும் திரா​விட கட்​சிகளுக்கு சவாலாக உயர்ந்​தோம். சுயநல​வா​தி​கள் கருத்​தைக் கேட்டு கட்​சியை வளர்த்த ‘கோபுரக் கலசத்​தை’ குழி​யில் தள்​ளி​விட்டு பிற இயக்​கத்​தின் ‘காகத்தை கழுகு’ என நினைத்து சாணக்​கியர் சறுக்​கி​னாரோ என மனம் வருந்​துகிறது.

இந்த வருத்​தம் என்​னால் ஏற்​பட்​டது என உணர்ந்​தால், பாஜக​வின் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​களின் பாதங்​களில் விழுந்து மன்​னிப்​புக் கேட்டு நானும் என் தலை​மையி​லான குழு​வும் அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்து விடை​பெறுகிறோம் என தோல்​வியை ஒப்​புக்​கொண்​டிருப்​போம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த பரபரப்பு அடங்​கு​வதற்​குள் பாஜக​வின் வாக்கு வங்​கியை 12 சதவீதத்​தில் இருந்து 3 சதவீத​மாக குறைந்​ததற்​குப் பொறுப்​பேற்று நயி​னார் நாகேந்​திரன், தமிழிசை, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன் ஆகிய 4 பேரும் கட்​சியி​லிருந்து வில​கு​வ​தாக நயி​னார் நாகேந்​திரன் கையெழுத்​தில் கடிதம் வெளி​யான​தால் மேலும் பரபரப்பு எழுந்​துள்​ளது.

இந்​தக் கடிதம் போலி​யானது என போலீ​ஸில் பாஜக சார்​பில் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும் அந்​தக் கடிதம் சமூக வலை தளங்​களில் பரப்​பப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து பாஜக​வினர் கூறியதாவது: அண்​ணா​மலை தலை​வ​ராக இருந்​த​போது கட்சி வேக​மாக வளர்ந்​தது. நயி​னார் நாகேந்​திரன் தலை​வ​ரானதும் பாஜக அதி​முக​வின் ஒரு கிளை அமைப்​பு​போல் மாறி​விட்​டது. வேறு கட்​சிகளில் இருந்து குறிப்​பாக திரா​விடக் கட்​சிகளில் இருந்து வந்​தோருக்கு கட்​சி​யில் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டது.

அண்​ணா​மலை எதிர்ப்பு என்ற ஒற்​றைக் காரணத்​துக்காக தமிழிசை, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன் ஆகியோர் நயி​னார் நாகேந்​திரனுடன் இணைந்து செயல்​பட்​டனர். அனைத்​துத் தொகு​தி​களி​லும் பாஜக பின்​னுக்​குத் தள்​ளப்​பட்​டது. இந்த படு​தோல்விக்கு நயி​னார் நாகேந்​திரன் பொறுப்​பேற்க வேண்​டும். மேலிடம் அவரை தலை​வர் பதவியி​லிருந்து மாற்றி புதிய தலை​வரை நியமிக்க வேண்​டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Post

‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..’ அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்…

Posted by - December 14, 2022 0
Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

Posted by - February 20, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அரியானா, குஜராத்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *