அறிக்கையின்படி, Vi நிறுவனம் Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi , 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனைத் திரட்டுவதற்காக பல கடன் வழங்குநர்களை அணுகியுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் ஜனவரி 6 அன்று தெரிவித்தது. கடனாக கேட்கும் தொகையில் பெரும்பகுதி இண்டஸ் டவர்ஸுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
பல பிரபல வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்களிடம் 15,000 கோடி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் புதிய கடன்களை வழங்குமாறு Vi கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சமீபகாலமாக Vi நிறுவனம் சுமார் 75,830.8 கோடி எதிர்மறை நிகர மதிப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நஷ்டத்தை குறிக்கும் எதிர்மறை நிகர மதிப்பு கொண்ட நிறுவனத்திற்கு வங்கி அமைப்புகள் கடன்களை வழங்க முடியாது என்பதால் எல்லா இடங்களிலும் மறுப்பு செய்தி மட்டுமே கிடைத்து வருகிறது, இந்த கடன் இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல.
நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் (ஏபிஜி) இணைந்து vi என்ற புதிய கூட்டு சேவையை 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்காக Indus டவர் நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் Vi நிறுவனம் நஷ்டத்தில் சென்றுகொண்டு இருப்பதால் டவர் நிறுவனத்திற்கு சரிவர பணம் செலுத்தவில்லை.
சென்ற ஆண்டே Indus நிறுவனம் Vi நிறுவனம் பணம் செலுத்தப்படாவிட்டால் டவர் தளங்களுக்கான அதன் அணுகலைத் துண்டிக்கும் என்று எச்சரித்திருந்தது. பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட கட்டண திட்டத்தை வழங்கியது, அதை டவர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.
அதன்படி டவர் நிறுவனத்திற்கு ஜனவரி முதல் அதன் தற்போதைய நிலுவைத் தொகையில் 100 சதவீதத்தை செலுத்த உறுதியளித்துள்ளது. அறிக்கையின்படி, Vi நிறுவனம் Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டவர் நிறுவனத்திற்கு Vi நிறுவனம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை ரூ.250-300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை செலுத்த பணம் இல்லாத நிலையில்தான் கடன் கேட்டு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அலைந்து வருகிறது.
- Home
- Trending Tamil
- செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!
Related Post
வெற்றிலையின் 10 அற்புத நன்மைகள் தெரியமா?
கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய…
லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…
படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்
சமந்தா இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது…
KERALA ஸ்டைல் மலபார் மீன் குழம்பு… ரெசிபி இதோ.!
kerala food| மலபார் மீன் குழம்பு என்பது புளி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான கேரளா உணவாகும். இந்த மீன் குழம்பை தேங்காய் பால்…
Categories
- Sports (85)
- TN Political Zone (337)
- Trending Tamil (708)
- Viral Social (12)
- அரசியல் (212)
- இந்தியா (476)
- உலகம் (174)
- சினிமா (825)
- தமிழ்நாடு (1,129)
Recent Posts
- CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு – சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?

- ’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்

- ”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக – தவெக மீது அட்டாக்

- Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?

- Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ – வெளுத்துவிட்ட உதயநிதி
