KERALA ஸ்டைல் மலபார் மீன் குழம்பு… ரெசிபி இதோ.!

251 0

 kerala food| மலபார் மீன் குழம்பு என்பது புளி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான கேரளா உணவாகும். இந்த மீன் குழம்பை தேங்காய் பால் ஊற்றி செய்வதால் அதன் ருசி அருமையாக இருக்கும்.

நெய் சோறு, புட்டு, கடலைக் கறி, செம்மீன், மீன் பொளிச்சது, அடைப் பிரதமன், மலபார் மீன் குழம்பு, மீன் கறி, அப்பம் போன்ற ஏராளமான கேரளா உணவுகள் உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல உணவுகளாக இருந்து வருகின்றன.

அதில் ஒன்று தான் மலபார் மீன் குழம்பு. மலபார் மீன் குழம்பு என்பது புளி, தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான கேரளா உணவாகும். இந்த மீன் குழம்பை தேங்காய் பால் ஊற்றி செய்வதால் அதன் ருசி அருமையாக இருக்கும்

இந்த கேரளா ஸ்டைல் மலபார் மீன் குழம்பை தேங்காய் பால் ஊற்றி எளிய முறையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • எலும்பு இல்லாத மீன் துண்டுகள் – 500 கிராம்
  • பெரிய வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
  • புளி கரைசல் – தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் – 4
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – 1.5 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு விதைகள் – 3/4 டீஸ்பூன்
  • சீரகம் – 3/4 டீஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 3 கொத்து

    செய்முறை :

    எலும்பு இல்லாத மீன்களை நன்றாக சுத்தம் செய்து அலசி 2 அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து அதன் பாலை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் தேவையான அளவு புளி எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கரைத்து அதன் கரைசலை எடுத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.

    பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    பிறகு வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து குறைந்த வெப்பத்தில் 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

    பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து கிளறி மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகப் பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் புளி கரைசல் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    வெங்காயம் மற்றும் தக்காளி முழுவதுமாக மசாலாக்களுடன் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.

    எண்ணெய் பிரியும் தருவாயில் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் வரை 3 நிமிடங்கள் சமைக்கவும்.

    இது கொதித்தவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறி மூடி 10 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும்.

    பிறகு தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் மலபார் மீன் குழம்பு தயார்.

    இந்த மீன் குழம்பை சாதத்துடன் சேர்த்து பரிமாறுவதற்கு முன் அரை மணிநேரம் அதை அப்படியே வைத்துவிடுங்கள்.

Related Post

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Posted by - November 14, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக்…

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023 0
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல…

1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்…

Posted by - December 28, 2023 0
காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியலையா? இட்லி சுடலாம் என்றால் இட்லி மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?…

Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

Posted by - March 17, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில…

புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

Posted by - April 18, 2023 0
 சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர். ’மோதலும் காதலும்’ என்ற புதிய தமிழ் சீரியலை ஏப்ரல் 24-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *