கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனை அவன் குடியிருந்த பகுதிக்கு சென்று காவல்துறை கைது செய்தது. அவனிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர்களிடம்,“கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
இதில் சிறுவன், சிறுமியின் தந்தையால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க வேண்டுமென முடிவு செய்த சிறுவன், அவரின் 9 வயது மகளான சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிளேடால் அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான்” எனத் தெரிவித்திருக்கிறது.
புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது…
இந்தி உள்ளிட்ட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், மத்திய அரசின் தேசிய…
கொரோனா பரவல் அச்சம் காரணமாக மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலை கொண்டு வர நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியவகை கொரோனா பிஎஃப்…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் மோடி, ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். அது குறித்து அவர் என்ன கூறினார் என்பதை…
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார்…