ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின், மிளகாய் பொடி.. சித்ரவதை செய்து ரசித்த சைக்கோ தம்பதி – கேரளாவில் நடந்தது என்ன?

158 0

கேரளாவில் இளைஞர்களை ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்து அவர்களது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின் அடித்தும், மிளகாய் பொடி தூவியும் அவர்களை சித்ரவதை செய்த சைக்கோ கணவன் – மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் அமைந்துள்ளது பத்தினம்திட்டா. இந்த பகுதியில் அமைந்துள்ளது சரல்குன்னு.  இந்த பகுதியைச் சேர்ந்தவர் ரஷ்மி. இவரு்ககு வயது 23. இவரது கணவர் ஜெயேஷ். இவருக்கு வயது 29. ரஷ்மி இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.

வீட்டிற்கு வரவழைத்த பெண்: 

அப்போது, ஆலப்புழாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் உண்டாகியுள்ளது. பின்னர், அவரிடம் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று ரஷ்மி அழைத்துள்ளார். சல்லாப ஆசையில் ரஷ்மியின் வீட்டிற்குச் சென்ற அந்த இளைஞரிடம் ரஷ்மி பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், ரஷ்மியின் அருகில் அவர் சென்றபோது அங்கே ரஷ்மியின் கணவர் ஜெயேஷ் இதை அனைத்தையும் மறைந்திருந்து செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின்:

பின்னர், ஜெயேஷ் அவரது மனைவி ரஷ்மியுடன் சேர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளார். அப்போதுதான் தான் மாட்டிக்கொண்டதை அந்த இளைஞர் உணர்ந்துள்ளார். பின்னர், அந்த வாலிபரை கட்டி தொங்கவிட்டுள்ளனர். பின்னர், அவரை நிர்வாணப்படுத்தி அவரின் ஆணுறுப்பில் 26 ஸ்டேபிளர் பின்களை அடித்துள்ளனர். அவரது கை மற்றும் கால்களில் உள்ள விரல் நகங்களையும் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து பிடுங்கியுள்ளனர்.

அந்த இளைஞர் வலியால் துடிப்பதை இருவரும் பார்த்து ரசித்துள்ளனர். பின்னர், அவரிடம் இருந்த செல்போன், 6 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். பின்னர், அவரது வாயில் துணியை கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு இறக்கிவிட்டுள்ளனர். அப்போது, அவரது முனகல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் சென்ற ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.

சைக்கோ கணவன் – மனைவி:

மருத்துவமனையில் இவரது ஆணுறுப்பில் ஸ்டேபிளர் பின்கள் அடிக்கப்பட்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், தகவல் அறிந்த போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்காெண்டனர்.  இதையடுத்து, ஆரன்மூளா போலீசார் ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரஷ்மியை கைது செய்தனர்.

கணவன் மனைவி இருவரிடமும் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வந்தது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரஷ்மியும், ஜெயேஷும் இணையத்தில் இளைஞர்களை குறிவைத்துள்ளனர். ரஷ்மி அதில் இளைஞர்களை பேசி மயக்க உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி வீட்டிற்கு அழைத்து அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பறித்துவிட்டு அந்த இளைஞர்களை சித்ரவதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த ஓணம் பண்டிகையின்போதும் இளைஞர் ஒருவரை வீட்டிற்கு வர வைத்து இதேபோல, அவரை கட்டி தொங்கவிட்டு அவரிடம் இருந்து பணம், நகைகளை பறித்தது மட்டுமின்றி அவரது ஆணுறுப்பில் மிளகாய் பொடியைத் தூவி ரசித்துள்ளனர். பின்னர், அவரது ஆணுறுப்பிலும் ஸ்டேபிளர் பின் அடித்து அதை ரசித்துள்ளனர். இதைக் கேட்டு போலீசார் இந்த சைக்கோ தம்பதியினரை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சல்லாபத்திற்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இதுபோன்று சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

ஆந்திராவில் பெண்களை இரவு நேரங்களில் வீட்டில் கொண்டு விட புதிய திட்டம்

Posted by - May 9, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் தனியாக பயணம் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெண்கள் வீட்டில் விடும் புதிய திட்டத்தை போலீசார்…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *