தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

242 0

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 700-ஐ தாண்டியிருந்தது. நேற்று ஒரே நாளில் 754 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருந்தது.தினசரி பாதிப்பு 796-ஆக உயர்வு: கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5  ஆயிரத்தை தாண்டியது | Tamil News 796 corona positive cases across india

இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை யிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 226 பேர், குஜராத்தில் 119 பேர், கேரளாவில் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 93 ஆயிரத்து 506 ஆக உயர்ந்து உள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 388 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவர்கள் எண்ணிக்கை 5,026 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 403 அதிகமாகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், புதுச்சேரியில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,795 ஆக உயர்ந்துள்ளது.

Related Post

மற்ற இன்டர்நெட் சேவைகளை பின்னுக்கு தள்ளப்போகும் ஜியோ ஏர் ஃபைபர்… சிறப்பம்சங்கள் என்ன?

Posted by - August 28, 2023 0
எண்ணற்ற இன்டர்நெட் யூசர்கள் ஜியோ ஃபைருக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். #jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #anantambani…

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்

Posted by - July 4, 2023 0
மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி…

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025 0
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான…

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

சராசரி மக்களுக்கு ஏற்ற மலிவு கார் எது?

Posted by - January 6, 2026 0
இந்தியாவில் தற்போது கிடைக்கும் குறைந்த விலை Top 5 கார்கள் – முழு விவரம் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் பட்ஜெட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *