தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

211 0

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் முதல்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுவும் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளையும் கைப்பற்றிட திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதால், அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தேர்தல் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 4,000க்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுக்கு வந்திருக்கிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும். பாஜகவின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள் பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்டத் தொண்டர் வரை அனைத்து விவரங்களும் தலைமைக்குத் தெரியும். தேர்தலுக்குப் பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பிறகு டி.கே.எஸ் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார்.

Related Post

இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Posted by - December 30, 2025 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில்…

பெண் காவலரிடம் அத்துமீறல்.. திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைது; கட்சியிலிருந்து இடைநீக்கம்!

Posted by - January 4, 2023 0
பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது…

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

Posted by - August 21, 2023 0
போரூர்: தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை…

உடனே விண்ணப்பிங்க!

Posted by - August 6, 2025 0
அரசு வெளியிட்ட தகவலின்படி, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 29, 2025-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். சென்னை: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *