இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

135 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்​கையை ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி​முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் 4-வது நாளாக சென்னை எழில​கத்​தை​யும், நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகத்​தை​யும் முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர்.

டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆசிரியர்​களை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர். அதேபோல் உழைப்​பாளர் சிலை அருகே கூடிய ஏராள​மான ஆசிரியர்கள், எழில​கம் நோக்கி பேரணி​யாக சென்​றனர். இந்த போராட்​டத்​தில் ஆசிரியர்​களின் குழந்​தைகள் உட்பட குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அனு​மதி இல்​லாமல் சென்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். இதனால் காம​ராஜர் சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​ய​தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்​பின் ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் சில ஆசிரியர்​களுக்கு லேசான காய​மும், மயக்​க​மும் ஏற்​பட்​டது. மயக்​க மடைந்த ஆசிரியர்கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும் கைது நடவடிக்​கையை புகைப்​படம் எடுக்க முயன்ற ஆசிரியர்​களின் செல்​போன்​களை போலீ​ஸார் பறித்​துக் கொண்​டனர். இதுத​விர பெண்​களை, ஆண் போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தாக​வும் குற்றம் சாட்டப்பட்​டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏராள​மானோர் காம​ராஜர் சாலை​யில் திடீரென போராட்​டம் நடத்​தி​ய​தால், அங்கு கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் வாக​னங்​கள் மாற்​றுப்​பாதை​யில் அனுப்​பப்​பட்​டன.

இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்​டுமென இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

பொங்கல் பரிசு ரூ.2500 ரொக்க பணத்துடன் வேட்டி, சேலை, கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் – விஜயகாந்த் கோரிக்கை

Posted by - December 26, 2022 0
பரிசுத் தொகுப்புகளில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி…

கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

Posted by - April 24, 2024 0
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல்…

“இங்கு பாம்புதான் அரசியல்… ஆனால் நான் பயப்படமாட்டேன்..” – தவெக மாநாட்டில் விஜய் சொன்ன காரணம்!

Posted by - October 28, 2024 0
அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட். “இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை…

கடந்த ஆண்டை விட தீபாவளி தினத்தில் குறைந்த தீ விபத்து… கைகொடுத்த விழிப்புணர்வு.. தீயணைப்பு துறை!

Posted by - November 1, 2024 0
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ…
Generated Image January 06 2026 1 06PM

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்

Posted by - January 6, 2026 0
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும். இதனை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் முடித்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *