இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: சென்னையில் திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

113 0

சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு நில​வியது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 2009 மே 31-ம் தேதி நியமிக்​கப்​பட்ட இடைநிலை ஆசிரியர்​களுக்கு ஓர் ஊதி​ய​மும், மறு​நாள் ஜூன் 1-ல் பணி நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்கு வேறு ஊதி​ய​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு​நாள் வித்​தி​யாசத்​தில் அடிப்​படை ஊதி​யத்​தில் ரூ.3,170 குறைந்​துள்​ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த முரண்​பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்​ட​கால​மாக போராடி வரு​கின்​றனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்​கையை ஏற்​க​வில்​லை.

இந்​நிலை​யில் சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த டிசம்​பர் 26-ம் தேதி​முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அவர்​கள் 4-வது நாளாக சென்னை எழில​கத்​தை​யும், நுங்​கம்​பாக்​கம் டிபிஐ வளாகத்​தை​யும் முற்​றுகை​யிட்டு நேற்று போராட்​டம் நடத்​தினர்.

டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆசிரியர்​களை போலீ​ஸார் தடுத்து கைது செய்​தனர். அதேபோல் உழைப்​பாளர் சிலை அருகே கூடிய ஏராள​மான ஆசிரியர்கள், எழில​கம் நோக்கி பேரணி​யாக சென்​றனர். இந்த போராட்​டத்​தில் ஆசிரியர்​களின் குழந்​தைகள் உட்பட குடும்​பத்​தினரும் பங்​கேற்​றனர்.

அனு​மதி இல்​லாமல் சென்​ற​தால் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்​தினர். இதனால் காம​ராஜர் சாலை​யில் அமர்ந்து போராட்​டம் நடத்​தி​ய​தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்​பின் ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது தள்​ளு​முள்ளு ஏற்​பட்​ட​தில் சில ஆசிரியர்​களுக்கு லேசான காய​மும், மயக்​க​மும் ஏற்​பட்​டது. மயக்​க மடைந்த ஆசிரியர்கள் அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும் கைது நடவடிக்​கையை புகைப்​படம் எடுக்க முயன்ற ஆசிரியர்​களின் செல்​போன்​களை போலீ​ஸார் பறித்​துக் கொண்​டனர். இதுத​விர பெண்​களை, ஆண் போலீ​ஸார் கைது செய்ய முயன்​ற​தாக​வும் குற்றம் சாட்டப்பட்​டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஏராள​மானோர் காம​ராஜர் சாலை​யில் திடீரென போராட்​டம் நடத்​தி​ய​தால், அங்கு கடும் போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டது. இதனால் வாக​னங்​கள் மாற்​றுப்​பாதை​யில் அனுப்​பப்​பட்​டன.

இந்​நிலை​யில் தங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்​டுமென இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் உள்​ளிட்ட கட்சிகள் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Related Post

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

Posted by - January 19, 2024 0
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன், அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை கொடுமைபடுத்தியதாக கூறி பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

Posted by - September 24, 2025 0
 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் …. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *