பள்ளி மாணவிகளை வைத்து தொழில்… மகள் மூலம் வலை விரிப்பு.. பெண் புரோக்கரின் திடுக்கிடும் பின்னணி

215 0

சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை, வளசரவாக்கம்  வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு, போலீசார் அதிர்ந்து போனார்கள். இதனை அடுத்து பெண் புரோக்கர் நதியா, அவரது உறவினர்கள் மற்றும் 17, 18 வயதே ஆன 2 இளம்பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் படுபயங்கர சம்பவம் அம்பலமாகியுள்ளது.பெண் புரோக்கரான நதியா, 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மூலம் அவரது பள்ளி தோழிகளுக்கு வலைவீசியுள்ளார். பள்ளி மாணவிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மூளை சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். உள்ளூர் புரோக்கர்கள் மூலம் தன்னிடம் சிக்கிய சிறுமிகளை லாட்ஜுகளுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமாகியுள்ளது.சென்னை மாநகரில் பாலியல் இச்சை கொண்ட வயதான நபர்கள் பலர் சிறுமிகள் வேண்டும் என்று நதியாவிடம் கேட்டுள்ளனர். அது போன்ற நேரங்களில் 17 வயதே ஆன மாணவிகளை நதியா அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். இதற்காக ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலித்து இருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ஏராளமான மாணவிகளின் வாழ்க்கையோடு நதியா விளையாடி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், கைதான புரோக்கர்களிடமிருந்து 7 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தின் கீழ் நதியா உள்பட 7 பேரை சிறையில் அடைத்துள்ள போலீசார், மீட்கப்பட்ட 2 இளம்பெண்களை காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றால் எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பள்ளி மாணவிகள் மூளை சலவை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

மார்கழி மாதம் கோயில்களில் தினம் தினம் பாடல்கள்: ஏன் இது முக்கியம்?

Posted by - December 20, 2025 0
மார்கழி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான காலம். இந்த மாதத்தில் கோயில்களில் தினமும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன. இதன் பின்னணி, நோக்கம் மற்றும் மக்களுக்கு ஏற்படும்…

அரசியலிலும் சாதிக்க வேண்டுமென விஜய்க்கு மாணவி அழைப்பு…

Posted by - June 17, 2023 0
#BREAKING | மேடையிலேயே விஜய்யை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த மாணவி மாணவியின் அழைப்பை கடைசி வரை கவனமுடன் கேட்டுக்கொண்ட விஜய் சென்னை, நீலாங்கரையில் மாணவ – மாணவிகளுக்கு…
Generated Image November 13 2025 10 04AM

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

ஒமைக்ரான் போட்ட குட்டிகள்: தமிழகத்தில் பரவியுள்ள 2 புதிய கொரோனா வைரஸ்

Posted by - September 7, 2023 0
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக அவதாரம் எடுத்து அது தனது வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது…

ராமேசுவரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பக்தர்கள்

Posted by - February 20, 2023 0
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *