Generated Image November 13 2025 10 04AM

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

150 0

சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல்- தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், டிசம்பம் மாத தொடக்கமே அதிரடியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்ட நிலையில், தமிழக எல்லையில் நுழையும் போதே ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக்காற்றோடு மழையானது கொட்டியது. அடுத்து டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டைக்கு மட்டுமே கடந்த நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த மழையானது குறிப்பிட்ட தேதிகளில் பெய்யவில்லை.

சென்னையில் 24 மணி நேர கன மழை

ஆனால் வானிலை ஆய்வாளர்களே எதிர்பார்க்காத திடீர் டுவிஸ்ட் ஏற்பட்டு சென்னைக்கு அருகே  வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருந்த போதும் மழை இல்லாத மேகங்கள் மட்டுமே கொண்டிருந்த டிட்வா, அடுத்த அடுத்த நகர்வுகளில் மழை மேகங்களை உருவாக்கியது. இதனால் சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய மழையானது கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியும் காட்சியளித்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இந்த சூழ்நிலையில் கடந்த 18 மணி நேரமாக சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

 

இன்று இரவு கரையை கடக்கும்

இது தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அருகில்  தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என தெரிவித்துள்ளார். கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு கிழக்கே 40கிமீ தொலைவில் ஒரே இடத்தில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்.

கரையை கடப்பதற்து முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிககனமழை முதல் அதித கனமழை வரை பதிவாக வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும் தரைக்காற்று அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Related Post

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

Posted by - June 10, 2025 0
 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க…

ஒடிசா ரெயில் விபத்து: மாயமான என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல்வைப்பு

Posted by - June 20, 2023 0
கோரமண்டல் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரெயில், ஒரு சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் பஹனாகா ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி கோர விபத்திற்குள்ளாகின.…

முதலுதவி.. பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க.. முக்கோண தலையை தெரியுமா.. கவனம் மக்களே

Posted by - October 30, 2023 0
ஈரோடு: பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை அற்புதமாக விளக்கியுள்ளார் வனச்சரகர் சதீஷ் நிர்மல். இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர்…

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023 0
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *