பாஜக மாநிலத் தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

122 0

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

போட்டியின்றி தேர்வானார் நயினார் நாகேந்திரன்

மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட நயிநாருக்கு மட்டுமே கட்சித் தலைமை அனுமதி வழங்கியதையடுத்து, நயினார் நாகேந்திரன் இன்று, அண்ணாமலை, எல். முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில், தனது விருப்ப மனுவை, பாஜக மாநில தேர்தல் பொறுப்பாளர் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் தலைவராவதற்கு, அண்ணாமலை, எல். முருகன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 பேர் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தன்னை பரிந்துரைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தலைவர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தான் கேட்ட வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே, மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு வழங்கிய நிலையில், அவர் பாஜக மாநிலத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாகவும், நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளியாகும் எனவும் பாஜக தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

மாநிலத் தலைவர் பதவிக்கான விதிகளை தளர்த்திய பாஜக தலைமை

மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு குறைந்தது 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி கூறியுள்ளார். ஏற்கனவே, பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தலைமையால் இதுபோன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனால், நயினார் நாகேந்திரன் தலைவராவதில் சிக்கல் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Post

“கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை” – திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

Posted by - November 6, 2024 0
கொள்கை வீரர்களை உருவாக்க வேண்டியது உங்கள் கடமை என திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின்…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

Posted by - December 30, 2025 0
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும்…

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

Posted by - May 21, 2025 0
தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்று பாஜக தேசிய பொதுக்குழு…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்

Posted by - February 24, 2024 0
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *