அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

150 0

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸ் பதவி மாற்றம் பணி செய்யப்பட்டு தலைவர் பதவியை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸே எடுத்துக்கொண்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பமாக பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் அறிவித்த ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.,

2026 இல் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கருதி முழு மனதுடன் இந்த அறிவிப்பை நான் இன்று வெளியிடுகிறேன் என்று அன்புமணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இனி அன்புமணி தலைவர் இல்லை – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பது மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன் என்றும் தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அமைப்பு ரீதியாகவும் மாற்றம்

எனது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பதவி வரிசை அறிவிப்பதில் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவதலைவர் ஜி கே மணி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் பொருளாளர் திலகபாமா என அணி பொறுப்பாளர்கள் உள்ளவர்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவார்கள். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றுபட்டு உணர்வோடு தீவிரமாக செயல்பட்டு தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இதுவரை கண்டிராத அளவில் மாபெரும் வெற்றிமாறாக நடத்திட மாநாட்டு குழு தலைவராக நியமன செய்யப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களோடு இணைந்து ஒன்றுபட்ட உணர்வோடு உழைக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ராமதாஸ் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முற்றிய மோதல் – நீக்கப்பட்ட அன்புமணி – ராமதாஸ் ஆவேசம்

பாட்டாளி மக்கள் கட்சியை யார் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது என்பதில் நிறுவனரான ராமதாஸ்க்கும், தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடைபெற்று வந்ததாகவும், அதுதான் கடந்த பொதுக்குழுவில் வெடித்து, இளைஞரணி தலைவர் பதவி குறித்து நிர்வாகிகள் மத்தியிலே இருவரும் காரசாரமாக விவாதிக்க காரணம் என கூறப்பட்டது. அப்போது, ஆவேசமான அன்புமணி தான் பேசிக்கொண்டிருந்த மைக்கை தூக்கி டேபிளில் போட்டார். அதன்பின்னரும் ராமதாஸ், கட்சி என்னுடையது இங்கு நான் சொல்பவர்கள் தான் இருக்க  வேண்டும், நான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் பேசினார். அது இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து வேறுபாட்டை பட்டவர்தனமாக காட்டியது.

சமாதான படலம் தோல்வி – நீக்கப்பட்ட அன்புமணி

அதன்பின்னர், தைலாப்புரம் தோட்டத்தில் வைத்து அன்புமணியை சமாதானம் செய்ய நிர்வாகிகள் முயற்சித்தது பலனிக்களிக்கவில்லை. தன்னை கட்சியில் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்றும், மாறி வரும் கள சூழலுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அதனை ஏற்காத ராமதாஸ், அவரை அந்த பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்.

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…

பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

Posted by - March 16, 2026 0
TVK Alliance : பாஜக, அஇஅதிமுக, சசிகலா, ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என…

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Posted by - December 23, 2025 0
சென்னை: பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்…

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - April 9, 2026 0
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *