“புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்தவர் காட்டிக் கொடுக்கப்பட்டார்” – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

149 0

கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக புகார் அளித்த அதிமுக நிர்வாகி காட்டிக் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,  கொலையாளிகளை விட்டு விட்டு மற்றவர்களை கைது செய்து வழக்கை திசை திருப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜகபர் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில, இவர் மட்டும் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் தொழுகை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜகபர் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜகபர் அலியின் மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமயம் அருகே கல் குவாரி என்ற பெயரில் சிலர், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தடுக்கும் வகையில், தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர்கள், லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து விடுவதாக ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்ததாக, அவரின் மனைவி கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தனது புகாரில் மரியம் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Post

ஒரே மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 விஷயத்தை டெய்லி ஃபாலோ பண்ணுங்க..!

Posted by - November 29, 2023 0
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. யாராலும் எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவுகள், உடற்பயிற்சி…

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - February 26, 2024 0
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை,…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Posted by - September 13, 2023 0
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *